தமிழ் இலக்கணம்

1. சந்தி இலக்கணம்
வரையறையும் நோக்கமும்

1.1சந்தி என்றால் என்ன??
ஞாயிறு என்ற சொல்லோடு "ஐ" , "ஆல்" முதலாய வேற்றுமை விகுதிகளைச் சேர்க்கும் போது ஞாயிற்றை, ஞாயிற்றால் என்று சொற்கள் அமைகின்றன.
ஞாயிறு என்ற சொல்லோடு கிழமை என்ற சொல்லைச் சேர்க்கும்போது ஞாயிற்றுக்கிழமை என்ற தொகை உருவாகிறது. ஞாயிற்றை, ஞாயிற்றால் என்பவற்றில் றகர ஒற்று (ற்) இரட்டியது. ஞாயிற்றுக்கிழமை என்பதில் றகர ஒற்று இரட்டியதோடு ககர (க்) ஒற்றும் மிகுந்தது. இவ்வாறு சொல்லோடு விகுதியும் மற்றொரு சொல்லும் சேரும்போது ஏற்படும் மாற்றங்களைச் 'சந்தி' என்பர். சந்தி பற்றிய விதிகளைச் சந்தி விதிகள் என்றும் சந்தியை விளக்கும் இலக்கணத்தைச் சந்தி இலக்கணம் என்றும் கூறுவர். சந்தி இலக்கணத்தை நமது இலக்கணங்கள் 'புணரியல்' என்றும் 'புணர்ச்சி இலக்கணம்' என்றும் கூறும்.

1.2 சந்தி இலக்கணம் ஏன்?

சந்தி இலக்கணம் இல்லாமல் மொழி இயங்காதா? தொடர்களிலும் சொற்களிலும் சந்தி இலக்கணம் இல்லாமற் போனால் என்ன குறை? இப்படி சில கேள்விகள் எழுந்தால் வியப்பில்லை.

முதலாவதாக, சந்தி இலக்கணம் கைவிடப்பட்டால் பொருளில் தெளிவு குன்றி மயக்கத்துடன் இடம் ஏற்படக்கூடும். மாட்டுக்கன்று என்பதற்குப் பதிலாக மாடுகன்று என்று எழுதினால் பொருள் மாறுபடுகிறது. இவ்வாறே பழக்கூடை என்பதற்குப் பதில் பழங்கூடை என்று எழுதினாலும் பொருள் மாறுபடுகிறது. பொருட் குழப்பத்தை நீக்கித் தெளிவைக் காக்கச் சந்தி இலக்கணம் ஒரு இன்றியமையாத கருவி எனலாம்.

இரண்டாவதாக, சொற்சேர்க்கையில் தோன்றும் மாற்றங்களை எழுத்து வடிவால் காட்டுவதற்குச் சந்தி இலக்கணம் உதவிகிறது. 'மரம்' என்ற சொல்லும் 'கள்' என்ற விகுதியும் சேரும்போது இயல்பாகவே மகர ஒற்று ஙகர ஒற்றாக மாறி மரங்கள் என்று ஒலிக்கக் காண்கிறோம். இத்தகைய மாற்றங்களையெல்லாம் எழுத்து வடிவால் காட்டச் சந்தி இலக்கணம் திட்டவட்டமாக விதி வகுத்துச் செல்கிறது.

மூன்றாவதாக, மொழியில் வழிவழியாகக் காக்கப்பட்ட மரபு காக்கப்படுவதற்குச் சந்தி உதவி புரிகிறது.

1.3 எப்படிப்பட்ட சந்தி வேண்டும்?

கடல்தாவு படலம் என்பது கடறாவு படலம் என்றும், சில்தாழிசைக் கொச்சகம் என்பது சிஃறாழிசைக் கொச்சகம் என்றும் மாறுகின்ற மாற்றங்களை நாம் இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் கண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட கடுஞ்சந்திகள் இப்போதைய இலக்கியத் தமிழில் இடம் பெறுவதில்லை. 'உன்னைப் பார்த்தேன்' மற்றும் 'உனக்குக் கொடுத்தேன்' முதலாய தொடர்களில் வேற்றுமை விகுதியைஅடுத்து வரும் ஒற்றுகளை இன்றைய செந்தமிழில் விலக்கி எழுதுவது பிழை என்று கருதுகிறோம். ஆகவே, இன்றைய செந்தமிழில் எல்லோரும் ஏற்றுப் போற்றும் சந்திகளை மட்டுமே பார்ப்போம்.

2. கருவிகள்

சந்தி இலக்கணம் பற்றிப் பேசவும் விதிகளை வகுக்கவும் விளக்கம் கூறவும் சில இன்றியமையாத இலக்கண குறியீடுகளையும், மரபுகளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். சந்தி இலக்கணத்துக்குத் தேவையான கருவிகளை அமைத
்துக் கொள்வதே இந்தப் பகுதியின் நோக்கம்.

2.1 எழுத்துவகை

தமிழில் உள்ள எழுத்துக்கள் உயிர், ஆய்தம், மெய் என மூன்று பெரும் பிரிவாகப் பிரிக்கப்படும்.

2.1.1 உயிர்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள ஆகிய பன்னிரண்டு எழுத்துக்களையும் உயிர் என்பர். இவை குறில், நெடில் என இரண்டு வகையாகப் பிரிக்கப்படும்.

2.1.2 குறில்

அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறில்களாம். இவற்றைக் குற்றெழுத்து என்றும் சுட்டுவர்.

2.1.3 நெடில்

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழும் நெடில்களாம். இவற்றை நெட்டெழுத்து என்றும் சுட்டுவர். இங்கே கூறப்பட்ட சில உயிர்கள் (ஐ, ஒள) தன் இயல்பான அளவிலிருந்து குறுகி ஒலிப்பதும் உண்டு.

2.1.4 குற்றியலிகரம்

தனக்கு இயல்பான அளவிலிருந்து குறுகி ஒலிக்கும் "இகரத்தை"க் குற்றியலிகரம் என்பர். எடுத்துக்காட்டு காண்க :-

பாம்பியாது (பாம்பு + யாது?)கேண்மியா ( கேள் + மியா)

2.1.5 குற்றியலுகரம்

தனக்கு இயல்பான அளவிலிருந்து குறுகி ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் எனப்படும். க், ச், ட், த், ப், ற் ஆகிய வல்லொற்றுகளின் மேல் ஏறிவரும் உகரம் படு, கெடு எனத் தனிக்குறிலுன் பின்வரும் போது மட்டும் குறுகுவதில்லை. ஏனைய இடங்களிலெல்லாம் அது குறுகியே ஒலிக்கும். குற்றியலுகரத்தை குற்றுகரம் என்றும் குறுகிய உ என்றும் குறிப்பதுண்டு.குற்றுகரம் கீழ்கண்டவாறு ஆறு வகையாகப் பிரிக்கப்படும். (எடுத்துக்காட்டு)

1. வன்றொடர் (கொக்கு)2. மென்றொடர் (குரங்கு)3. இடைத்தொடர் (நல்கு)4. ஆய்தத் தொடர் (எஃது)5. நெடிற்றொடர் (ஆடு)6. உயிர்த்தொடர் (அழகு, மிலாறு)

தனிநெடிலை அடுத்து வரும் குற்றுகரம் மட்டுமே நெடிற்றொடராகும். ஆடு என்பது நெடிற்றொடர் என்றும் மிலாறு என்பது உயிர்த்தொடர் என்றும் கொள்ளப்படுவதற்கான காரணத்தை நன்கு தெளிந்துக் கொள்க. நெடிற்றொடருக்கும் உயிர்த்தொடருக்கும் மேலும் சில எடுத்துக்காட்டுகள் தருகிறேன். அவற்றையும் கண்டு தெளிவு பெறுக.

நெடிற்றொடர் (பாடு, மாடு, கூறு, ஏடு, ஓடு, ஆறு, ஏறு,)

உயிர்த்தொடர் (பழகு, வேசறு, கழுகு, களிறு, பலாசு, விளாசு, உரசு)

நெடிற்றொடர்க் குற்றுகரச் சொற்களில் குற்றுகரத்தின்முன் நெட்டெழுத்து மட்டுமே நிற்பதையும் உயிர்த்தொடர்க் குற்றுகரச் சொற்களில் குற்றுகரத்தின் முன் தனிநெடில் நில்லாமல் குறிலும் நெடிலுமாகவோ குறிலும் குறிலுமாகவோ குரைந்து இரண்டு எழுத்துக்கள் சேர்ந்து நிற்பதையும் நன்கு நோக்கி இவற்றிடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்க.

2.1.6 ஐகாரக் குறுக்கம்

ஐகாரம் நெடில் என்று கொள்ளப்பட்டாலும் இது நெட்டுயிர்க்குரிய மாத்திரையிலிருந்து குறைந்தே ஒலிக்கும். மொழியில் முதல், இடை, கடை ஆகிய மூன்றிடங்களிலும் இது குறுகியே நிற்கும். எடுத்துக்காட்டு:-

முதல் ( பையன், வையம் )

இடை ( தலைவன், நிலையம் )

கடை ( அவரை, கலை )

மொழி முதலில் உள்ள ஐகாரத்தை விட இடையிலும் கடையிலும் உள்ள ஐகாரங்கள் மேலும் குறுகி ஒலிப்பதனை மீண்டும் ஒலித்து உணர்க.

2.1.7 ஒளகாரக்குறுக்கம்

ஒளகாரமும் ஐகாரம் போலவே மொழியில் நெட்டுயிர்க்குரிய மாத்திரையிலிருந்து குறைந்தே ஒலிக்கும். ஒளகார உயிரும் உயிர்மெய்யும் மொழியின் இடையிலும் கடையிலும் வராமையால் ஒளகாரக்குறுக்கம் மொழிமுதலுக்கு மட்டுமே பொருந்தும். எடுத்துக்காட்டு ( ஒளவை, கெளவை, வெளவால், ஒளவியம் )

2.1.8 ஆய்தம்

ஆய்த எழுத்தினைத் தனிநிலை என்றும் கூறுவர். ஆய்தமும் தனக்கு இயல்பான மாத்திரையிலிருந்து குறுகி ஒலித்தல் உண்டு. அவ்வாறு குறுகிய ஆய்தம் குற்றாய்தம் என்றும் குறுகாத ஆய்தம் முற்றாய்தம் என்றும் பெயர் பெறும். குற்றாய்தத்தை ஆய்தக்குறுக்கம் என்றும் குறிப்பர். கஃறீது, முஃடீது எனச் சந்தி விதிகளாற் பிறக்கும் ஆய்தம் குற்றாய்தத்துக்கு எடுத்துக்காட்டுகளாகும். அஃது, இஃது, எஃது முதலாய சொற்களில் காணப்படும் ஆய்தம் முற்றாய்தம்.

2.1.9 மெய்

மெய்யெழுத்துக்களை ஒற்று என்றும், புள்ளி என்றும் கூறுவர். க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் தமிழில் உள்ள மெய்களாம். இவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகப் பிரிக்கப்படும்.

2.1.10 வல்லினம்

வல்லினம், வங்கணம், வலி ஆகியன ஒரு பொருட்கிளவிகள். க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறும் வல்லின மெய்களாம்.

2.1.11 மெல்லினம்

மெல்லினம், மெங்கணம், மெலி ஆகியன ஒரு பொருட்கிளவிகள். ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறும் மெல்லின மெய்களாம்.

2.1.12 இடையினம்

இடையினம், இடைக்கணம், இடை ஆகியன ஒரு பொருட்கிளவிகள். ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறும் இடையின மெய்களாம்.

2.1.13 உயிர்மெய்

மெய்யோடு உயிர்கள் சேர்ந்து க, கா, கி, கீ என இவ்வாறு தோன்றும் எழுத்துக்கள் யாவும் உயிர்மெய் எனப் பெயர் பெறும். 18 மெய்களும் 12 உயிர்களும் சேர்ந்து 216 உயிர்மெய்கள் தோன்றுகின்றன.

2.1.14 அளபெடை

உயிர், மெய், ஆய்தம் ஆகிய எழுத்துக்கள் தத்தமக்கு உரிய மாத்திரையினின்று மிக்கு ஒலிப்பதும் உண்டு. அவ்வாறு மிக்கு ஒலிப்பதனை அளபெடை என்பர். இந்த அளபெடை அளபு என்றும் குறிக்கப்படும். இது உயிரளபு, ஒற்றளபு என இரு வகைப்படும்.

2.1.15 உயிரளபு

நெட்டெழுத்துக்கள் ஏழும் அளபெடுக்கும். அளபெடுக்கும் போது ஆகாரத்துக்கு அகரமும் ஈகரத்திற்கு இகரமும் ஊகாரத்திற்கு உகரமும் ஏகாரத்திற்கு எகரமும் ஓகாரத்துக்கு ஓகரமும் அளபெடைக் குறியாக வரும். ஐகாரத்துக்கு இகரமும் ஒளகாரத்துக்கு உகரமும் அளபெடைக் குறியாக வருதல் மரபு.

2.1.16 ஒற்றளபு

உயிரளபெடை போலவே ஒற்றளபெடையும் உண்டு. ங், ஞ், ண், ந், ம், ன், ய், வ், ல், ள் ஆகிய ஒற்றுகள் மட்டுமே அளபெடுக்கும். ஆய்தமும் அளபெடுக்க வல்லது. ஆய்த அளபெடை என்று தனியே ஒரு அளபெடை வகையை அமைக்காமல் நமது மரபிலக்கணங்கள் அதனையும் ஒற்றளபில் அடக்கிக் கொண்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

2.1.17 மொழிமுதல் எழுத்துக்கள்

12 உயிர்களும் க், ச், த், ந், ப், ம்,வ், ய், ஞ் ஆகிய மெய்களும் மொழி முதல் எழுத்துக்களாக வரும். மெய்கள் மொழி முதலில் வரும்போது தனிமெய்யாக வராது. உயிர்மெய்யாகவே வரும். ங் என்ற மெய் மொழி முதலாக வரும் என்று இலக்கணங்கள் கொண்டாலும் இக்கால வழக்கிற்கு அது பொருந்தாமையால் நாம் அதை இங்கே மொழி முதலெழுத்தாகக் குறிப்பிடவில்லை. 

2.1.17.1 மொழி முதலில் உயிர்கள்

எடுத்துக்காட்டு ==> (அவன், ஆடு, இது, ஈகை, உலகு, ஊசி, எடு, ஏடு, ஐந்து, ஒன்பது, ஓடு, ஒளவை)

2.1.17.2 மொழி முதலில் மெய்கள்

எடுத்துக்காட்டு ==> (கடல், சால்பு, தண்மை, நன்மை, பழகு, மணம், வளம், யார், ஞாயிறு)

2.1.18 மொழியிறுதி எழுத்துக்கள்

12 உயிர்களும் மொழியிறுதி எழுத்துக்களாக வரும். ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய 11 மெய்களும் மொழிக்கு இறுதியில் வரும். நமது மரபிலக்கணங்கள் குற்றியலுகரத்தையும் மேற்கூறிய மொழியிறுதி எழுத்துக்களோடு சேர்ந்து மொழியிறுதி எழுத்துக்கள் 24 என்று கூறும்.

2.1.18.1 மொழி இறுதியில் உயிர்கள்

எடுத்துக்காட்டு ==> (கட, நிலா, கிளி, தீ, கொடு, பூ, எ, தே, கலை, நொ, கோ, கெள)

2.1.18.2 மொழி இறுதியில் மெய்கள்

எடுத்துக்காட்டு ==> (உரிஞ், கண், பொருந், மரம், மான், நாய், தேர், பால், தெவ், யாழ், நாள்)

2.1.18.3 மொழி இறுதியில் குற்றுகரம்

எடுத்துக்காட்டு ==> (பட்டு, வண்டு, உல்கு, எஃது, வரகு, ஆடு)

இக்கால வழக்கில் எகர ஒகர இறுதியும் ஞ், ந், வ் ஆகிய மெய்யிறுதியும் அருகி நிற்றல் காண்க.

2.1.19 அசைகள்

தமிழ்மொழி அமைப்பில் அசைக் கோட்பாட்டுக்கு ஒரு தனி இடம் உண்டு. உயிரும் உயிர்மெய்யும் குறிப்பிட்ட நெறியில் சேர்ந்த சேர்க்கைக்கு அசை என்று பெயர். ஒரு அசையில் இரண்டுக்கு மேற்பட்ட உயிர்கள் அமைவதில்லை. அசைகள் அவற்றின் அமைப்புக்கேற்ப நேரசை, நிரையசை என இரு வகைப்படும்.

2.1.19.1 நேரசை

குறில் தனித்தோ ஒற்றடுத்தோ வரும்போது நெடில் தனித்தோ ஒற்றடுத்தோ வரும்போது நேரசை அமையும்.

எடுத்துக்காட்டு

உல-கு (குறில் தனித்து வந்தது)உல-கம் (குறில் ஒற்றடுத்து வந்தது)பா (நெடில் தனித்து வந்தது)பால் (நெடில் ஒற்றடுத்து வந்தது)

குறிலுக்குப் பின் இன்னொரு குறில் இருந்தால் இரண்டும் இணைந்து நிரையசையாகும். அப்படி இன்னொரு குறில் இல்லாதபோது குறில் தனித்து நின்று நேரசையாகும்.

2.1.19.2 நிரையசை

இருகுறில்கள் இணைந்தோ இணைந்து ஒற்றடுத்தோ வரும்போது ஒரு குறிலும் ஒரு நெடிலும் சேர்ந்தோ சேர்ந்து ஒற்றடுத்தோ வரும்போது நிரையசை அமையும்

எடுத்துக்காட்டு

படி (இரு குறில்கள் இணைந்து வந்தது)படம் (இரு குறில்கள் இணைந்து ஒற்றடுத்து வந்தது)நிலா (ஒரு குறிலும் ஒரு நெடிலும் சேர்ந்து வந்தது)விளாம் (ஒரு குறிலும் ஒரு நெடிலும் சேர்ந்து ஒற்றடுத்து வந்தது)

நெடிலும் குறிலும் சேர்ந்து ஒரு அசை அமைவதில்லை என்பது குறிலோ நெடிலோ ஒற்று இடையிடாமல் பின்தொடரும்போது அதன் முன்னிற்கும் குறில் நேரசையாகாது என்பது இங்கே நன்கு கவனிக்கத் தக்க செய்திகள். அதாவது ஆடு, பாடு என்பன ஓரசையல்ல. அவை இரண்டும் நேரசை சேர்ந்த சொற்கள். உலகு, பழகு என்பனவற்றில் உ, ப என்பன நேரசையாகா. உல, பழ என்பன நிரையசையாகி எஞ்சித் தனித்து நிற்கும் குறில் மட்டும் நேரசையாகும். நிரையசைகளில் நெடிலீற்று நிரையசையும் (நிலா) குறிலீற்று நிரையசையும் (பிடி) உண்டு என்பதை கவனித்து நினைவில் இருத்தத்தக்கது.

2.2 சொல்வகை

நமது மரபிலக்கணங்கள் தமிழ்ச் சொற்களைப் பொதுவாகப் பெயர், விணை, இடை, உரி என நான்காகப் பிரித்துள்ளன. ஓரசைச்சொல், ஈரசைச்சொல் முதலாய பிரிவுகளும் உணரத்தக்கன.

2.2.1 பெயர்ச்சொல்

கால இடைநிலைகளை ஏலாதனவாய் வேற்றுமை உருபுகளை ஏற்க வல்லனவாய்த் திணை, பால், எண், இடம் முதலாய இலக்கணக் கூறுகளை உணர்த்துவனவாய் அமைவன பெயர்ச்சொற்களாம். எழுவாய், பயனிலை இயைபுகளின் அடிப்படையிலும் சுட்டுப் பெயர்களின் அடிப்படையிலும் பெயர்கள் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு

ஆண்பாற்பெயர் (அவன், மாணவன்)பெண்பாற்பெயர் (அவள், மாணவி)பலர்பாற்பெயர் (அவர்கள், மக்கள்)ஒன்றன்பாற்பெயர் (அது, மரம்)பலவின்பாற்பெயர் (அவை, பழங்கள்)

இக்கால வழக்குக்கேற்ப உயர்பாற்பெயர் என்ற ஒரு பிரிவும் தேவைப்படுகிறது. உதாரணம் அவர், தலைவர். இங்கே கூறிய பிரிவை நம் இலக்கணங்கள் பால் என்று கூறும். பால் என்பது வகை அல்லது பகுப்பு என்று பொருள்படும்.

இங்கே கூறிய பால் பகுப்போடு திணைப்பகுப்பு பற்றியும் தெரிந்துக் கொள்ளவேண்டும். ஆண், பெண், பலர் ஆகிய மூன்று பால்களையும் உயர்திணை என்பர். ஒன்று, பல ஆகிய இருபால்களையும் அஃறிணை என்பர். இப்பாகுபாட்டைக் படத்தில் பார்த்து நன்கு விளங்கிக் கொள்ளுங்கள். இவற்றோடு இக்காலத் தமிழில் உயர்பால் என்று பகுப்பு உருவாகி வளர்ந்துள்ளது.

மேற்கண்ட பாகுபாடு தொடரியல் அடிப்படையில் அமைந்தது. பொருள் அடிப்படையில் பெயர்கள் பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் என அறுவகையாகக் பகுக்கப்படும்.

இவற்றோடு, எண்ணுப்பெயர், இடப்பெயர் முதலாய பிரிவுகளும் உணர்ந்து கொள்ளத்தக்கன.

2.2.1.1 எண்ணுப்பெயர்

ஒன்று, இரண்டு முதலாய எண்களைக் குறிக்கும் பெயர்களை எண்ணுப்பெயர் என்பர்.

2.2.1.2 இடப்பெயர்

தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூவகைப்படும். பேசுவோரைக் குறிப்பது தன்மை; கேட்போரைக் குறிப்பது முன்னிலை; ஏனைப்பெயர்கள் படர்க்கை.

பொருளடிப்படையில் அமைந்த அறுவகைப் பெயர்களில் காணும் இடப்பெயர் வேறு, இது வேறு என்பதை நினைவில் இருத்துக.

2.2.1.3 சுட்டுப்பெயர்

சுட்டிக் கூறப் பயன்படும் பெயர்கள் சுட்டுப் பெயர்களாம். இது அண்மைச் சுட்டு, சேய்மைச்சுட்டு என இருவகைப்படும். இவன், இவள், இவர், இவர்கள், இது, இவை ஆகியன அண்மைச் சுட்டு. அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை ஆகியன சேய்மைச்சுட்டு.

2.2.1.4 வினாப்பெயர்

வினாவுதற்குப் பயன்படும் பெயர் வினாப்பெயராம். இது பொதுவினா, சிறப்பு வினா என இரண்டாகப் பிரிக்கப்படும். யார், என்ன என்பவற்றைப் பொதுவினா என்றும், எவன், எவள், எது, எவை என்பனவற்றைச் சிறப்புவினா என்றும் கொள்ளலாம்.

2.2.1.5 பெயர்களின் இருவகை வடிவங்கள்

பெயர்கள் எழுவாயாக நிற்கும்போது உள்ள வடிவத்தை எழுவாய் வடிவம் என்றும் வேற்றுமை ஏற்கும்போது உள்ள வடிவத்தை வேற்றுமை ஏற்கும் வடிவம் என்றும் சுட்டலாம். சில பெயர்கட்கு இவை வேறுவேறாக அமையும்.

அவன் என்ற பெயர்க்கு எழுவாய் வடிவமும் வேற்றுமை ஏற்கும் வடுவமும் ஒன்றாகவே அமைந்துள்ளது. அவன் வந்தான். அவனைக் கண்டேன் முதலாய தொடர்கள் நோக்கி இதனை உணர்க. ஆடு என்ற பெயர்க்கு எழுவாய் வடிவம் வேறு; வேற்றுமை ஏற்கும் வடிவம் வேறு. ஆடு வந்தது எனவும், ஆட்டைக் கண்டேன் எனவும் வரும் தொடர்களில் எழுவாய் வடிவமும் வேற்றுமை ஏற்கும் வடிவமும் வேறு வேறாக, இருப்பதனைக் கொண்டு இதை உணரலாம்.

நான் என்பது எழுவாய் வடிவம். என் என்பது வேற்றுமை ஏற்கும் வடிவம். நீ என்பது எழுவாய் வடிவம். உன் என்பது வேற்றுமை ஏற்கும் வடிவம்.

2.2.2 வினைச்சொல்

கால இடைநிலைகளையும், பாலிட விகுதிகளையும் ஏற்க வல்லன வினைச்சொற்களாம். கால இடைநிலைகளை ஏற்பன தெரிநிலைவினை என்றும், கால இடைநிலைகளை ஏற்க இயலாதன குறிப்புவினை என்றும் பெயர்பெறும். எடுத்துக்காட்டு கீழே :-

படித்தான் (தெரிநிலைவினை)நல்லன் (குறிப்புவினை)

தெரிநிலைவினைகள் முற்றுவினை, எச்சவினை என இரு வகைப்படும். குறிப்பு வினைகளில் சிலவற்றுக்கு எச்சவினை வடிவங்க
ளும் உண்டு.

2.2.2.1 முற்றுவினை

கால இடைநிலைகளையும் பாலிட விகுதிகளையும் ஏற்றுச் செய்தான், செய்தாள் முதலாய வாய்பாட்டில் வருவனவும் எதிர்மறை இடைநிலைகளையும் பாலிட விகுதிகளையும் ஏற்றுச் செய்யான், செய்ய மாட்டான் முதலாய வாய்பாட்டில் வருவனவும் செய், செய்யும், செய்யுங்கள் எனவும், செய்யாதே, செய்யாதீர், செய்யாதீர்கள் எனவும் உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் ஏவல் வாய்பாடுகளில் வருவனவும் செய்யலாம். செய்க முதலாய வாய்பாடுகளில் வருவனவும் இவை முதலாய பிறவும் முற்றுவினைகளாம்.

2.2.2.2 எச்சவினை

பொருள் இயைபு நோக்கில் வேறொரு சொல் எஞ்சி நிற்க அமைவது எச்சவினை. எச்சவினைகள் பெயரெச்சம், வினையெச்சம் என இருவகைப்படும்.

2.2.2.2.1 பெயரெச்சம்

பெயர்களைக் கொண்டு முடியும் வினைச்சொற்கள் பெயரெச்சம் எனப் பெயர் பெற்றன. இப்பெயரெச்சம் இறந்தகாலப் பெயரெச்சம், நிகழ்காலப் பெயரெச்சம், எதிர்காலப் பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் என நான்கு வகைப் படும். எடுத்துக்காட்டு கீழே:-

வந்த (இறந்தகாலப் பெயரெச்சம்)வருகின்ற (நிகழ்காலப் பெயரெச்சம்)வரும் (எதிர்காலப் பெயரெச்சம்)செய்யாத (எதிர்மறைப் பெயரெச்சம்)

எதிர்மறைப் பெயரெச்சங்களில் த என்ற ஈறு இல்லாமல் செய்யா வாய்பாட்டில் வரும் பெயரெச்சங்களை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பர்.

2.2.2.2.2 வினையெச்சம்

வினைகளைக் கொண்டு முடியும் எச்சவினைகளை வினையெச்சம் என்பர். வினையெச்சங்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்படும்.

வாய்பாடு எடுத்துக்காடுகள்

1. செய்ய (ஓட, படிக்க, நடக்க)2. செய்து (ஓடி, படித்து, நடந்து)3. செய்தால் (ஓடினால், படித்தால், நடந்தால்)4. செய்யாமல் (ஓடாமல், படிக்காமல், நடக்காமல்)5. செய்யாது (ஓடாது, படிக்காது, நடக்காது)

வேறுசில வினையெச்சங்களும் உண்டு. படி, முன், பின், முதலாய வினையெச்ச இடைச்சொற்கள் பெயரெச்சங்களோடு சேர்ந்து வினையெச்சங்கள் அமையும். இவற்றைக் கூட்டு வினையெச்சம் எனலாம். எடுத்துக்காட்டு வந்தபோது, சொன்னபடி, வரும்முன், வந்தபின், சொன்னவாறு ஆகியன.

2.2.2.3 வினைப்பெயர்

வினையடியாகப் பிறக்கும் பெயர்களை வினைத்தன்மை குன்றின, குன்றாதன என இருவகையாகப் பிரிக்கலாம். போக்கு, வரவு முதலாய பெயர்கள் வினைத்தன்மை குன்றியன. இவை பெயர்த்தன்மை மட்டுமே பெற்ற்ப் பெயரடைகளை ஏற்றல், வேற்றுமை ஏற்றல் ஆகிய இயல்புகளுடன் வரும். போதல், வருதல் முதலாய பெயர்கள் வினைத்தன்மை குன்றாதனவாய் நான் போதல், நீ வருதல் என எழுவாய் ஏற்றல் போன்ற வினைத்தன்மையோடும் போதலை, வருதலை என வேற்றுமை ஏற்றல் முதலாய பெயர்த் தன்மையோடும் வருதல் காண்க. வினைத்தன்மைக் குன்றாத பெயர்களை மட்டுமே இங்கு வினைப்பெயர் என்று குறிக்கிறோம். தொழிற்பெயர் என்பதும் இதுவே. எடுத்துக்காட்டு படித்தல், நடத்தல், போதல், சாதல், வருதல், வரல், போவது, வருவது, போனமை, வந்தமை ஆகியன.

2.2.2.4 வினையாலணையும் பெயர்

வினையடியாகப் பிறந்து கால இடைநிலை அல்லது எதிமறை இடைநிலையும் பாலிட விகுதிகளையும் ஏற்று வேற்றுமை ஏற்கும் இயல்போடு வரும் பெயர்களை வினையாலணையும் பெயர்கள் என்பர். இவையும் வினைத்தன்மை குன்றாத பெயர்களே. வந்தவன் என்ற வினையாலணையும் பெயர் இங்கு வேகமாக வந்தவன் என வினையடைகளை ஏற்று வருதல் காண்க. எடுத்துக்காட்டு வந்தவன், வந்தவள், வந்தவர், வந்தவர்கள், வந்தது, வந்தவை ஆகியன.

2.2.2.5 குறிப்புவினை

மேலே தெரிநிலை வினைகட்குக் கூறியவாறே குறிப்பு வினைகளிலும் முற்றுவினை, எச்சவினை என்ற வகைகள் உண்டு. நல்லன், இனியன் முதலான சொற்கள் குறிப்புவினை. நல்ல, இனிய முதலாயவை குறிப்புப் பெயரெச்சம். அன்றி, இன்றி முதலாயவை குறிப்பு வினையெச்சம். நல்லவன், இனியவன் முதலாயவை குறிப்பு வினையாலணையும் பெயர்கள்.

2.2.3 இடைச்சொல்

அடிச்சொல்லாக நில்லாமல் அடிச்சொல்லோடு சேர்ந்து நின்று இலக்கண நோக்கில் செயற்படும் சொற்களும் உணர்ச்சி வெளிப்பாட்டுக் கிளவிகளும் இடைச்சொற்கள் என்று பெயர் பெறும். அன்றியும் ஏய், அடேய் என்பன போன்ற விளிகளும் அன், இன் போன்ற சாரியைகளும் பல்வகை அசைநிலைகளும் அடைச்சொல் என்றே பயர்பெறும்.
2.2.3.1 வேற்றுமை உருபுகள்

ஒரு முற்றுத்தொடரில் நிற்கும் பெயரை எழுவாயாகவும் செயப்படுபொருளாகவும் கருவியாகவும் இடமாகவும் இவ்வாறு பல வகையில் வேற்றுமைப் படுத்தும் உருபுகளை வேற்றுமை உருபுகள் என்பர். தமிழில் உள்ள வேற்றுமைகளை எட்டு வகையாகப் பிரிப்பர். இவற்றுள் முதல் வேற்றுமைக்குத் தனியே ஒரு உருபு இல்லை. எட்டாம் வேற்றுமைக்கு உருபுகள் பல எனலாம்.

வேற்றுமைகளின் பெயர்களும் உருபுகளும் படத்தில் தரப்பட்டுள்ளன. வேற்றுமைகள் உருபாலும் பொருளாலும் எண்ணு முறையாலும் பெயர் பெற்றிருப்பதை நோக்குக.

2.2.3.2 பின்னொட்டுகள் / பின்னுருபுகள்

வேற்றுமை உருபுகளின் இலக்கணப் பணியை முன், பற்றி, இருந்து, உடைய, மீது முதலான சொற்கள் பெயர்களோடும் வேற்றுமை உருபுகளோடும் ஒட்டி நின்று இயற்றுவதுண்டு. இவை பின்னொட்டுகள் அல்லது பின்னுருபுகள் என்று பெயர் பெறும். எடுத்துக்காட்டுகள் ====> எனக்குமுன், என்னைப்பற்றி, ஊரிலிருந்து, என்னுடைய, என்மீது என்பன.

2.2.3.3 அடைகள்

நல்ல, தீய முதலாய சொற்களும் வந்த, சென்ற முதலாய சொற்களும் பெயர்கட்கு அடைகளாக வரும். வந்து, சென்று முதலாய எச்சங்களும் மெல்ல, விரைந்து முதலாய சொற்களும் வினைகட்கு அடைகளாக வரும். இவ்வாறு பெயர்களையும் வினைகளையும் கொண்டு முடியும் சொற்கள் பொதுவாக அடைகள் என்று பெயர் பெறும். பெயர் கொண்டு முடிவன பெயரடைகள் என்றும் வினைகொண்டு முடிவன வினையடைகள் என்றும் குறிக்கப்படும். பெயரடைகளை உருவாக்க ஆன, உள்ள, உடைய, உரிய முதலான கிளவிகள் பெயர்களோடு சேர்க்கப்படுவது உண்டு. பெயரடைகளை உருவாக்கப் பயன்படும் சொற்களைப் பெயரடை இடைச்சொற்கள் எனலாம். இவ்வாறே, வினையடைகளை உருவாக்க ஆக, ஆய் முதலாய கிளவிகள் பெயர்களோடு சேர்க்கப்படுவதும் உண்டு. வினையடைகளை உருவாக்கப் பயன்படும் சொற்களை வினையடை இடைச்சொற்கள் எனலாம். எடுத்துக்காட்டு====> அழகான மலர், அன்புள்ள அன்னை, கோபமாக வந்தான், கோபமாய் வந்தான்.

2.2.4 அசைமுறை வகைப்பாடு

சொற்களை ஓரசைச்சொல், ஈரசைச்சொல் என்றும், நேரசைச்சொல், நிரையசைச்சொல் என்றும் நெடிலீற்று நிரையசைச்சொல், குறிலீற்று நிரையசைச்சொல் என்றும் சந்தி இலக்கணத்தில் சுட்டிக் கூறவேண்டிய தேவை ஏற்படக்கூடும்.

ஓரசைச்சொல் (பூ, மலர்)ஈரசைச்சொல் (நாடு, பாட்டு, பழகு)நேரசைச்சொல் (பூ, பால்)நிரையசைச்சொல் (மலர், பல, பலா)நெடிலீற்று நிரையசைச்சொல் (பலா, நிலா)குறிலீற்று நிரையசைச்சொல் (பல, தெரு)

2.2.5 மேலும் சில சொல்வகை

மேலே கண்ட வகைபாடுகளோடு தனிச்சொல், கூட்டுச்சொல், வேர்ச்சொல், அடிச்சொல், செம்மொழிச்சொல், பிறமொழிச்சொல், தற்சுட்டு கிளவிகள் முதலாய வகைப்பாட்டுக் குறியீடுகளையும் இங்கே நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

2.2.5.1 தனிச்சொல்

நீ, நான் எனவும் போ, வா எனவும் நல்ல, தீய எனவும் வரும் சொற்களைத் தனிச்சொற்கள் எனலாம். ஒரு வேர்ச்சொல் தனித்தோ அல்லது ஒன்றும் பலவுமாய் விகுதிகள் அல்லது ஒட்டுகளுடனோ வருவது தனிச்சொல்.

2.2.5.2 சுட்டுச்சொல்

இயல்பாகவோ திரிந்தோ ஒன்றுக்கு மேற்பட்ட வேர்ச்சொற்கள் சேர்ந்து அமையும் சொல் ஒரு சொல் போல வரும்போது அதைக் கூட்டுச்சொல் எனலாம். 

எடுத்துக்காட்டு ====> கண்டுபிடி, பகுத்தறிவு

2.2.5.3 வேர்ச்சொல்

பகுப்பாய்வு முறையில் பிரிக்கமுடியாத நிலையில் உள்ள மூலச்சொல் வேர்ச்சொல் எனப்படும்.

எடுத்துக்காட்டு ====> கல், நெல், செல், நில்

2.2.5.4 அடிச்சொல்

விகுதிகள் சேர இடங்கொடுத்து நிற்பனவெல்லாம் அடிச்சொற்கள் எனலாம். வேர்ச்சொற்களெல்லாம் அடிச்சொற்களாக வரும். அடிச்சொற்களெல்லாம் வேர்ச்சொற்களாகாது.

நிலையம் என்பதில் அம் என்ற விகுதி நிலை என்ற அடிச்சொல்லோடு சேர்க்கப்பட்டுள்ளது. கொலை என்பதில் ஐ என்ற விகுதி கொல் என்ற அடிச்சொல்லோடு சேர்க்கப்பட்டது. கொல் என்ற வேர்ச்சொல் இங்கு அடிச்சொல்லாகவும் அமைந்துள்ளது. கொல் என்பது மேலும் பிரிக்க இடந்தராமையால் வேர்ச்சொல்லாகும்.

2.2.5.5 செம்மொழிச்சொல்

பிறமொழிகளிலிருந்து கடன்பெறாமல் ஒரு மொழி தானே உருவாக்கிய சொல்லைச் செம்மொழிச்சொல் என்று குறிப்போம். பிறமொழிகளிலிருந்து வந்து செம்மொழி நிலையை எய்திய சொற்களைச் செம்மொழிமயமான சொற்கள் என்று குறிப்போம்.

நிலம், தலை, கை, கால் முதலானவை செம்மொழிச் சொற்கள், கன்னம், தனம், தானம் முதலானவை செம்மொழிமயமான சொற்கள் எனலாம்.

2.2.5.6 பிறமொழிச்சொல்

பிறமொழிகளிலிருந்து தேவையை முன்னிட்டுக் கடன் கொண்ட சொற்கள் பிறமொழிச் சொற்கள் என்ற வகையில் அடங்கும். டாக்டர், ரயில், லாரி முதலானவை பிறமொழிச் சொற்கட்குச் சில காட்டுகள்.

2.2.6 பகுபத உறுப்புகள்

சொற்களைப் பொதுவாகப் பகுபதம், பகாப்பதம் என்று பிரிப்பர். பிரிக்க இடம் தராத பதம் பகாப்பதம் என்றும், பிரிக்க இடம் தரும் பதம் பகுபதம் என்றும் பெயர் பெறும். பகுபதங்களில் பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் முதலான உறுப்புகள் அமைந்திருக்கும்.

2.2.6.1 பகுதி

ஒரு சொல்லிலுள்ள பகாப்பதமே பகுதி என்று பெயர் பெறும். நடந்தான் என்பதில் நட என்பது பகுதி.

2.2.6.2 விகுதி

பகுதியோடு சேர்ந்து வலப்பக்கம் நிற்கவல்ல கிளவிகளை விகுதி என்பர்.

சொல் (பகுதி + விகுதி)

நல்ல (நல் + அ)ஓடி (ஓடு + இ)ஊரன் (ஊர் + அன்)

2.2.6.3 இடைநிலை

காலங் காட்டவும் எதிர்மறை உணர்த்தவும் இடையில் நிற்கும் கிளவிகள் இடைநிலைகளாம். எடுத்துக்காட்டு கீழே

நடக்கிறான் : கிறுசெய்தாள் : த்போகாது : ஆ

2.2.6.4 சாரியை

தனக்கெனத் தனிப்பொருளின்றிச் சொற்களை உருவாக்கத்தக்க வகையில் சார்ந்து இயைந்து நிற்பது சாரியையாம். எடுத்துக்காட்டு கீழே

நடந்தனன் : அன்ஊரினன் : இன்

2.2.6.5 சந்தி

பகுதியும் கால இடைநிலையும் சந்திக்கும் வகையில் அமைந்தது சந்தி. எடுத்துக்காட்டுகள் கீழே

கொடுத்தான் (கொடு + த் + த் + ஆன்)தடுத்தான் (தடு + த் + த் + ஆன்) 

இங்கே பகுதியை அடுத்துள்ள தகர ஒற்றைச் சந்தி என்பர்.

2.2.6.6 விகாரம்

சந்தி எழுத்துகள் சில சொற்களில் விகாரப்படுவதும் உண்டு. இதை விகாரம் என்பர்.

நட - த் - த் ஆன் என்பது நடந்தான் என்று ஆகும் போது த் என்பது ந் ஆகி விகாரமானது. த் என்ற சந்தி ந் ஆகி விகாரப்பட்டது.

2.2.7 தற்சுட்டு கிளவிகள்

ஐ, ஔ என்பன ஐ, ஔ என்ற எழுத்துகள் என்ற பொருளிலும், புளி என்பது புளி என்ற சொல் என்ற பொருளிலும் வரும்போது அவை ஒவ்வொன்றும் தன்னையே சுட்டி நிற்பதால் தற்சுட்டு கிளவிகள் எனப்பெயர் பெறும்.

மூன்றாவதாக, மொழியில் வழிவழியாகக் காக்கப்பட்ட மரபு காக்கப்படுவதற்குச் சந்தி உதவி புரிகிறது.

1.3 எப்படிப்பட்ட சந்தி வேண்டும்?

கடல்தாவு படலம் என்பது கடறாவு படலம் என்றும், சில்தாழிசைக் கொச்சகம் என்பது சிஃறாழிசைக் கொச்சகம் என்றும் மாறுகின்ற மாற்றங்களை நாம் இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் கண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட கடுஞ்சந்திகள் இப்போதைய இலக்கியத் தமிழில் இடம் பெறுவதில்லை. 'உன்னைப் பார்த்தேன்' மற்றும் 'உனக்குக் கொடுத்தேன்' முதலாய தொடர்களில் வேற்றுமை விகுதியைஅடுத்து வரும் ஒற்றுகளை இன்றைய செந்தமிழில் விலக்கி எழுதுவது பிழை என்று கருதுகிறோம். ஆகவே, இன்றைய செந்தமிழில் எல்லோரும் ஏற்றுப் போற்றும் சந்திகளை மட்டுமே பார்ப்போம்.

2. கருவிகள்

சந்தி இலக்கணம் பற்றிப் பேசவும் விதிகளை வகுக்கவும் விளக்கம் கூறவும் சில இன்றியமையாத இலக்கண குறியீடுகளையும், மரபுகளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். சந்தி இலக்கணத்துக்குத் தேவையான கருவிகளை அமைத
்துக் கொள்வதே இந்தப் பகுதியின் நோக்கம்.

2.1 எழுத்துவகை

தமிழில் உள்ள எழுத்துக்கள் உயிர், ஆய்தம், மெய் என மூன்று பெரும் பிரிவாகப் பிரிக்கப்படும்.

2.1.1 உயிர்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள ஆகிய பன்னிரண்டு எழுத்துக்களையும் உயிர் என்பர். இவை குறில், நெடில் என இரண்டு வகையாகப் பிரிக்கப்படும்.

2.1.2 குறில்

அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறில்களாம். இவற்றைக் குற்றெழுத்து என்றும் சுட்டுவர்.

2.1.3 நெடில்

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழும் நெடில்களாம். இவற்றை நெட்டெழுத்து என்றும் சுட்டுவர். இங்கே கூறப்பட்ட சில உயிர்கள் (ஐ, ஒள) தன் இயல்பான அளவிலிருந்து குறுகி ஒலிப்பதும் உண்டு.

2.1.4 குற்றியலிகரம்

தனக்கு இயல்பான அளவிலிருந்து குறுகி ஒலிக்கும் "இகரத்தை"க் குற்றியலிகரம் என்பர். எடுத்துக்காட்டு காண்க :-

பாம்பியாது (பாம்பு + யாது?)கேண்மியா ( கேள் + மியா)

2.1.5 குற்றியலுகரம்

தனக்கு இயல்பான அளவிலிருந்து குறுகி ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் எனப்படும். க், ச், ட், த், ப், ற் ஆகிய வல்லொற்றுகளின் மேல் ஏறிவரும் உகரம் படு, கெடு எனத் தனிக்குறிலுன் பின்வரும் போது மட்டும் குறுகுவதில்லை. ஏனைய இடங்களிலெல்லாம் அது குறுகியே ஒலிக்கும். குற்றியலுகரத்தை குற்றுகரம் என்றும் குறுகிய உ என்றும் குறிப்பதுண்டு.குற்றுகரம் கீழ்கண்டவாறு ஆறு வகையாகப் பிரிக்கப்படும். (எடுத்துக்காட்டு)

1. வன்றொடர் (கொக்கு)2. மென்றொடர் (குரங்கு)3. இடைத்தொடர் (நல்கு)4. ஆய்தத் தொடர் (எஃது)5. நெடிற்றொடர் (ஆடு)6. உயிர்த்தொடர் (அழகு, மிலாறு)

தனிநெடிலை அடுத்து வரும் குற்றுகரம் மட்டுமே நெடிற்றொடராகும். ஆடு என்பது நெடிற்றொடர் என்றும் மிலாறு என்பது உயிர்த்தொடர் என்றும் கொள்ளப்படுவதற்கான காரணத்தை நன்கு தெளிந்துக் கொள்க. நெடிற்றொடருக்கும் உயிர்த்தொடருக்கும் மேலும் சில எடுத்துக்காட்டுகள் தருகிறேன். அவற்றையும் கண்டு தெளிவு பெறுக.

நெடிற்றொடர் (பாடு, மாடு, கூறு, ஏடு, ஓடு, ஆறு, ஏறு,)

உயிர்த்தொடர் (பழகு, வேசறு, கழுகு, களிறு, பலாசு, விளாசு, உரசு)

நெடிற்றொடர்க் குற்றுகரச் சொற்களில் குற்றுகரத்தின்முன் நெட்டெழுத்து மட்டுமே நிற்பதையும் உயிர்த்தொடர்க் குற்றுகரச் சொற்களில் குற்றுகரத்தின் முன் தனிநெடில் நில்லாமல் குறிலும் நெடிலுமாகவோ குறிலும் குறிலுமாகவோ குரைந்து இரண்டு எழுத்துக்கள் சேர்ந்து நிற்பதையும் நன்கு நோக்கி இவற்றிடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்க.

2.1.6 ஐகாரக் குறுக்கம்

ஐகாரம் நெடில் என்று கொள்ளப்பட்டாலும் இது நெட்டுயிர்க்குரிய மாத்திரையிலிருந்து குறைந்தே ஒலிக்கும். மொழியில் முதல், இடை, கடை ஆகிய மூன்றிடங்களிலும் இது குறுகியே நிற்கும். எடுத்துக்காட்டு:-

முதல் ( பையன், வையம் )

இடை ( தலைவன், நிலையம் )

கடை ( அவரை, கலை )

மொழி முதலில் உள்ள ஐகாரத்தை விட இடையிலும் கடையிலும் உள்ள ஐகாரங்கள் மேலும் குறுகி ஒலிப்பதனை மீண்டும் ஒலித்து உணர்க.

2.1.7 ஒளகாரக்குறுக்கம்

ஒளகாரமும் ஐகாரம் போலவே மொழியில் நெட்டுயிர்க்குரிய மாத்திரையிலிருந்து குறைந்தே ஒலிக்கும். ஒளகார உயிரும் உயிர்மெய்யும் மொழியின் இடையிலும் கடையிலும் வராமையால் ஒளகாரக்குறுக்கம் மொழிமுதலுக்கு மட்டுமே பொருந்தும். எடுத்துக்காட்டு ( ஒளவை, கெளவை, வெளவால், ஒளவியம் )

2.1.8 ஆய்தம்

ஆய்த எழுத்தினைத் தனிநிலை என்றும் கூறுவர். ஆய்தமும் தனக்கு இயல்பான மாத்திரையிலிருந்து குறுகி ஒலித்தல் உண்டு. அவ்வாறு குறுகிய ஆய்தம் குற்றாய்தம் என்றும் குறுகாத ஆய்தம் முற்றாய்தம் என்றும் பெயர் பெறும். குற்றாய்தத்தை ஆய்தக்குறுக்கம் என்றும் குறிப்பர். கஃறீது, முஃடீது எனச் சந்தி விதிகளாற் பிறக்கும் ஆய்தம் குற்றாய்தத்துக்கு எடுத்துக்காட்டுகளாகும். அஃது, இஃது, எஃது முதலாய சொற்களில் காணப்படும் ஆய்தம் முற்றாய்தம்.

2.1.9 மெய்

மெய்யெழுத்துக்களை ஒற்று என்றும், புள்ளி என்றும் கூறுவர். க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் தமிழில் உள்ள மெய்களாம். இவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகப் பிரிக்கப்படும்.

2.1.10 வல்லினம்

வல்லினம், வங்கணம், வலி ஆகியன ஒரு பொருட்கிளவிகள். க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறும் வல்லின மெய்களாம்.

2.1.11 மெல்லினம்

மெல்லினம், மெங்கணம், மெலி ஆகியன ஒரு பொருட்கிளவிகள். ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறும் மெல்லின மெய்களாம்.

2.1.12 இடையினம்

இடையினம், இடைக்கணம், இடை ஆகியன ஒரு பொருட்கிளவிகள். ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறும் இடையின மெய்களாம்.

2.1.13 உயிர்மெய்

மெய்யோடு உயிர்கள் சேர்ந்து க, கா, கி, கீ என இவ்வாறு தோன்றும் எழுத்துக்கள் யாவும் உயிர்மெய் எனப் பெயர் பெறும். 18 மெய்களும் 12 உயிர்களும் சேர்ந்து 216 உயிர்மெய்கள் தோன்றுகின்றன.

2.1.14 அளபெடை

உயிர், மெய், ஆய்தம் ஆகிய எழுத்துக்கள் தத்தமக்கு உரிய மாத்திரையினின்று மிக்கு ஒலிப்பதும் உண்டு. அவ்வாறு மிக்கு ஒலிப்பதனை அளபெடை என்பர். இந்த அளபெடை அளபு என்றும் குறிக்கப்படும். இது உயிரளபு, ஒற்றளபு என இரு வகைப்படும்.

2.1.15 உயிரளபு

நெட்டெழுத்துக்கள் ஏழும் அளபெடுக்கும். அளபெடுக்கும் போது ஆகாரத்துக்கு அகரமும் ஈகரத்திற்கு இகரமும் ஊகாரத்திற்கு உகரமும் ஏகாரத்திற்கு எகரமும் ஓகாரத்துக்கு ஓகரமும் அளபெடைக் குறியாக வரும். ஐகாரத்துக்கு இகரமும் ஒளகாரத்துக்கு உகரமும் அளபெடைக் குறியாக வருதல் மரபு.

2.1.16 ஒற்றளபு

உயிரளபெடை போலவே ஒற்றளபெடையும் உண்டு. ங், ஞ், ண், ந், ம், ன், ய், வ், ல், ள் ஆகிய ஒற்றுகள் மட்டுமே அளபெடுக்கும். ஆய்தமும் அளபெடுக்க வல்லது. ஆய்த அளபெடை என்று தனியே ஒரு அளபெடை வகையை அமைக்காமல் நமது மரபிலக்கணங்கள் அதனையும் ஒற்றளபில் அடக்கிக் கொண்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

2.1.17 மொழிமுதல் எழுத்துக்கள்

12 உயிர்களும் க், ச், த், ந், ப், ம்,வ், ய், ஞ் ஆகிய மெய்களும் மொழி முதல் எழுத்துக்களாக வரும். மெய்கள் மொழி முதலில் வரும்போது தனிமெய்யாக வராது. உயிர்மெய்யாகவே வரும். ங் என்ற மெய் மொழி முதலாக வரும் என்று இலக்கணங்கள் கொண்டாலும் இக்கால வழக்கிற்கு அது பொருந்தாமையால் நாம் அதை இங்கே மொழி முதலெழுத்தாகக் குறிப்பிடவில்லை. 

2.1.17.1 மொழி முதலில் உயிர்கள்

எடுத்துக்காட்டு ==> (அவன், ஆடு, இது, ஈகை, உலகு, ஊசி, எடு, ஏடு, ஐந்து, ஒன்பது, ஓடு, ஒளவை)

2.1.17.2 மொழி முதலில் மெய்கள்

எடுத்துக்காட்டு ==> (கடல், சால்பு, தண்மை, நன்மை, பழகு, மணம், வளம், யார், ஞாயிறு)

2.1.18 மொழியிறுதி எழுத்துக்கள்

12 உயிர்களும் மொழியிறுதி எழுத்துக்களாக வரும். ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய 11 மெய்களும் மொழிக்கு இறுதியில் வரும். நமது மரபிலக்கணங்கள் குற்றியலுகரத்தையும் மேற்கூறிய மொழியிறுதி எழுத்துக்களோடு சேர்ந்து மொழியிறுதி எழுத்துக்கள் 24 என்று கூறும்.

2.1.18.1 மொழி இறுதியில் உயிர்கள்

எடுத்துக்காட்டு ==> (கட, நிலா, கிளி, தீ, கொடு, பூ, எ, தே, கலை, நொ, கோ, கெள)

2.1.18.2 மொழி இறுதியில் மெய்கள்

எடுத்துக்காட்டு ==> (உரிஞ், கண், பொருந், மரம், மான், நாய், தேர், பால், தெவ், யாழ், நாள்)

2.1.18.3 மொழி இறுதியில் குற்றுகரம்

எடுத்துக்காட்டு ==> (பட்டு, வண்டு, உல்கு, எஃது, வரகு, ஆடு)

இக்கால வழக்கில் எகர ஒகர இறுதியும் ஞ், ந், வ் ஆகிய மெய்யிறுதியும் அருகி நிற்றல் காண்க.

2.1.19 அசைகள்

தமிழ்மொழி அமைப்பில் அசைக் கோட்பாட்டுக்கு ஒரு தனி இடம் உண்டு. உயிரும் உயிர்மெய்யும் குறிப்பிட்ட நெறியில் சேர்ந்த சேர்க்கைக்கு அசை என்று பெயர். ஒரு அசையில் இரண்டுக்கு மேற்பட்ட உயிர்கள் அமைவதில்லை. அசைகள் அவற்றின் அமைப்புக்கேற்ப நேரசை, நிரையசை என இரு வகைப்படும்.

2.1.19.1 நேரசை

குறில் தனித்தோ ஒற்றடுத்தோ வரும்போது நெடில் தனித்தோ ஒற்றடுத்தோ வரும்போது நேரசை அமையும்.

எடுத்துக்காட்டு

உல-கு (குறில் தனித்து வந்தது)உல-கம் (குறில் ஒற்றடுத்து வந்தது)பா (நெடில் தனித்து வந்தது)பால் (நெடில் ஒற்றடுத்து வந்தது)

குறிலுக்குப் பின் இன்னொரு குறில் இருந்தால் இரண்டும் இணைந்து நிரையசையாகும். அப்படி இன்னொரு குறில் இல்லாதபோது குறில் தனித்து நின்று நேரசையாகும்.

2.1.19.2 நிரையசை

இருகுறில்கள் இணைந்தோ இணைந்து ஒற்றடுத்தோ வரும்போது ஒரு குறிலும் ஒரு நெடிலும் சேர்ந்தோ சேர்ந்து ஒற்றடுத்தோ வரும்போது நிரையசை அமையும்

எடுத்துக்காட்டு

படி (இரு குறில்கள் இணைந்து வந்தது)படம் (இரு குறில்கள் இணைந்து ஒற்றடுத்து வந்தது)நிலா (ஒரு குறிலும் ஒரு நெடிலும் சேர்ந்து வந்தது)விளாம் (ஒரு குறிலும் ஒரு நெடிலும் சேர்ந்து ஒற்றடுத்து வந்தது)

நெடிலும் குறிலும் சேர்ந்து ஒரு அசை அமைவதில்லை என்பது குறிலோ நெடிலோ ஒற்று இடையிடாமல் பின்தொடரும்போது அதன் முன்னிற்கும் குறில் நேரசையாகாது என்பது இங்கே நன்கு கவனிக்கத் தக்க செய்திகள். அதாவது ஆடு, பாடு என்பன ஓரசையல்ல. அவை இரண்டும் நேரசை சேர்ந்த சொற்கள். உலகு, பழகு என்பனவற்றில் உ, ப என்பன நேரசையாகா. உல, பழ என்பன நிரையசையாகி எஞ்சித் தனித்து நிற்கும் குறில் மட்டும் நேரசையாகும். நிரையசைகளில் நெடிலீற்று நிரையசையும் (நிலா) குறிலீற்று நிரையசையும் (பிடி) உண்டு என்பதை கவனித்து நினைவில் இருத்தத்தக்கது.

2.2 சொல்வகை

நமது மரபிலக்கணங்கள் தமிழ்ச் சொற்களைப் பொதுவாகப் பெயர், விணை, இடை, உரி என நான்காகப் பிரித்துள்ளன. ஓரசைச்சொல், ஈரசைச்சொல் முதலாய பிரிவுகளும் உணரத்தக்கன.

2.2.1 பெயர்ச்சொல்

கால இடைநிலைகளை ஏலாதனவாய் வேற்றுமை உருபுகளை ஏற்க வல்லனவாய்த் திணை, பால், எண், இடம் முதலாய இலக்கணக் கூறுகளை உணர்த்துவனவாய் அமைவன பெயர்ச்சொற்களாம். எழுவாய், பயனிலை இயைபுகளின் அடிப்படையிலும் சுட்டுப் பெயர்களின் அடிப்படையிலும் பெயர்கள் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு

ஆண்பாற்பெயர் (அவன், மாணவன்)பெண்பாற்பெயர் (அவள், மாணவி)பலர்பாற்பெயர் (அவர்கள், மக்கள்)ஒன்றன்பாற்பெயர் (அது, மரம்)பலவின்பாற்பெயர் (அவை, பழங்கள்)

இக்கால வழக்குக்கேற்ப உயர்பாற்பெயர் என்ற ஒரு பிரிவும் தேவைப்படுகிறது. உதாரணம் அவர், தலைவர். இங்கே கூறிய பிரிவை நம் இலக்கணங்கள் பால் என்று கூறும். பால் என்பது வகை அல்லது பகுப்பு என்று பொருள்படும்.

இங்கே கூறிய பால் பகுப்போடு திணைப்பகுப்பு பற்றியும் தெரிந்துக் கொள்ளவேண்டும். ஆண், பெண், பலர் ஆகிய மூன்று பால்களையும் உயர்திணை என்பர். ஒன்று, பல ஆகிய இருபால்களையும் அஃறிணை என்பர். இப்பாகுபாட்டைக் படத்தில் பார்த்து நன்கு விளங்கிக் கொள்ளுங்கள். இவற்றோடு இக்காலத் தமிழில் உயர்பால் என்று பகுப்பு உருவாகி வளர்ந்துள்ளது.

மேற்கண்ட பாகுபாடு தொடரியல் அடிப்படையில் அமைந்தது. பொருள் அடிப்படையில் பெயர்கள் பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் என அறுவகையாகக் பகுக்கப்படும்.

இவற்றோடு, எண்ணுப்பெயர், இடப்பெயர் முதலாய பிரிவுகளும் உணர்ந்து கொள்ளத்தக்கன.

2.2.1.1 எண்ணுப்பெயர்

ஒன்று, இரண்டு முதலாய எண்களைக் குறிக்கும் பெயர்களை எண்ணுப்பெயர் என்பர்.

2.2.1.2 இடப்பெயர்

தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூவகைப்படும். பேசுவோரைக் குறிப்பது தன்மை; கேட்போரைக் குறிப்பது முன்னிலை; ஏனைப்பெயர்கள் படர்க்கை.

பொருளடிப்படையில் அமைந்த அறுவகைப் பெயர்களில் காணும் இடப்பெயர் வேறு, இது வேறு என்பதை நினைவில் இருத்துக.

2.2.1.3 சுட்டுப்பெயர்

சுட்டிக் கூறப் பயன்படும் பெயர்கள் சுட்டுப் பெயர்களாம். இது அண்மைச் சுட்டு, சேய்மைச்சுட்டு என இருவகைப்படும். இவன், இவள், இவர், இவர்கள், இது, இவை ஆகியன அண்மைச் சுட்டு. அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை ஆகியன சேய்மைச்சுட்டு.

2.2.1.4 வினாப்பெயர்

வினாவுதற்குப் பயன்படும் பெயர் வினாப்பெயராம். இது பொதுவினா, சிறப்பு வினா என இரண்டாகப் பிரிக்கப்படும். யார், என்ன என்பவற்றைப் பொதுவினா என்றும், எவன், எவள், எது, எவை என்பனவற்றைச் சிறப்புவினா என்றும் கொள்ளலாம்.

2.2.1.5 பெயர்களின் இருவகை வடிவங்கள்

பெயர்கள் எழுவாயாக நிற்கும்போது உள்ள வடிவத்தை எழுவாய் வடிவம் என்றும் வேற்றுமை ஏற்கும்போது உள்ள வடிவத்தை வேற்றுமை ஏற்கும் வடிவம் என்றும் சுட்டலாம். சில பெயர்கட்கு இவை வேறுவேறாக அமையும்.

அவன் என்ற பெயர்க்கு எழுவாய் வடிவமும் வேற்றுமை ஏற்கும் வடுவமும் ஒன்றாகவே அமைந்துள்ளது. அவன் வந்தான். அவனைக் கண்டேன் முதலாய தொடர்கள் நோக்கி இதனை உணர்க. ஆடு என்ற பெயர்க்கு எழுவாய் வடிவம் வேறு; வேற்றுமை ஏற்கும் வடிவம் வேறு. ஆடு வந்தது எனவும், ஆட்டைக் கண்டேன் எனவும் வரும் தொடர்களில் எழுவாய் வடிவமும் வேற்றுமை ஏற்கும் வடிவமும் வேறு வேறாக, இருப்பதனைக் கொண்டு இதை உணரலாம்.

நான் என்பது எழுவாய் வடிவம். என் என்பது வேற்றுமை ஏற்கும் வடிவம். நீ என்பது எழுவாய் வடிவம். உன் என்பது வேற்றுமை ஏற்கும் வடிவம்.

2.2.2 வினைச்சொல்

கால இடைநிலைகளையும், பாலிட விகுதிகளையும் ஏற்க வல்லன வினைச்சொற்களாம். கால இடைநிலைகளை ஏற்பன தெரிநிலைவினை என்றும், கால இடைநிலைகளை ஏற்க இயலாதன குறிப்புவினை என்றும் பெயர்பெறும். எடுத்துக்காட்டு கீழே :-

படித்தான் (தெரிநிலைவினை)நல்லன் (குறிப்புவினை)

தெரிநிலைவினைகள் முற்றுவினை, எச்சவினை என இரு வகைப்படும். குறிப்பு வினைகளில் சிலவற்றுக்கு எச்சவினை வடிவங்க
ளும் உண்டு.

2.2.2.1 முற்றுவினை

கால இடைநிலைகளையும் பாலிட விகுதிகளையும் ஏற்றுச் செய்தான், செய்தாள் முதலாய வாய்பாட்டில் வருவனவும் எதிர்மறை இடைநிலைகளையும் பாலிட விகுதிகளையும் ஏற்றுச் செய்யான், செய்ய மாட்டான் முதலாய வாய்பாட்டில் வருவனவும் செய், செய்யும், செய்யுங்கள் எனவும், செய்யாதே, செய்யாதீர், செய்யாதீர்கள் எனவும் உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் ஏவல் வாய்பாடுகளில் வருவனவும் செய்யலாம். செய்க முதலாய வாய்பாடுகளில் வருவனவும் இவை முதலாய பிறவும் முற்றுவினைகளாம்.

2.2.2.2 எச்சவினை

பொருள் இயைபு நோக்கில் வேறொரு சொல் எஞ்சி நிற்க அமைவது எச்சவினை. எச்சவினைகள் பெயரெச்சம், வினையெச்சம் என இருவகைப்படும்.

2.2.2.2.1 பெயரெச்சம்

பெயர்களைக் கொண்டு முடியும் வினைச்சொற்கள் பெயரெச்சம் எனப் பெயர் பெற்றன. இப்பெயரெச்சம் இறந்தகாலப் பெயரெச்சம், நிகழ்காலப் பெயரெச்சம், எதிர்காலப் பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் என நான்கு வகைப் படும். எடுத்துக்காட்டு கீழே:-

வந்த (இறந்தகாலப் பெயரெச்சம்)வருகின்ற (நிகழ்காலப் பெயரெச்சம்)வரும் (எதிர்காலப் பெயரெச்சம்)செய்யாத (எதிர்மறைப் பெயரெச்சம்)

எதிர்மறைப் பெயரெச்சங்களில் த என்ற ஈறு இல்லாமல் செய்யா வாய்பாட்டில் வரும் பெயரெச்சங்களை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பர்.

2.2.2.2.2 வினையெச்சம்

வினைகளைக் கொண்டு முடியும் எச்சவினைகளை வினையெச்சம் என்பர். வினையெச்சங்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்படும்.

வாய்பாடு எடுத்துக்காடுகள்

1. செய்ய (ஓட, படிக்க, நடக்க)2. செய்து (ஓடி, படித்து, நடந்து)3. செய்தால் (ஓடினால், படித்தால், நடந்தால்)4. செய்யாமல் (ஓடாமல், படிக்காமல், நடக்காமல்)5. செய்யாது (ஓடாது, படிக்காது, நடக்காது)

வேறுசில வினையெச்சங்களும் உண்டு. படி, முன், பின், முதலாய வினையெச்ச இடைச்சொற்கள் பெயரெச்சங்களோடு சேர்ந்து வினையெச்சங்கள் அமையும். இவற்றைக் கூட்டு வினையெச்சம் எனலாம். எடுத்துக்காட்டு வந்தபோது, சொன்னபடி, வரும்முன், வந்தபின், சொன்னவாறு ஆகியன.

2.2.2.3 வினைப்பெயர்

வினையடியாகப் பிறக்கும் பெயர்களை வினைத்தன்மை குன்றின, குன்றாதன என இருவகையாகப் பிரிக்கலாம். போக்கு, வரவு முதலாய பெயர்கள் வினைத்தன்மை குன்றியன. இவை பெயர்த்தன்மை மட்டுமே பெற்ற்ப் பெயரடைகளை ஏற்றல், வேற்றுமை ஏற்றல் ஆகிய இயல்புகளுடன் வரும். போதல், வருதல் முதலாய பெயர்கள் வினைத்தன்மை குன்றாதனவாய் நான் போதல், நீ வருதல் என எழுவாய் ஏற்றல் போன்ற வினைத்தன்மையோடும் போதலை, வருதலை என வேற்றுமை ஏற்றல் முதலாய பெயர்த் தன்மையோடும் வருதல் காண்க. வினைத்தன்மைக் குன்றாத பெயர்களை மட்டுமே இங்கு வினைப்பெயர் என்று குறிக்கிறோம். தொழிற்பெயர் என்பதும் இதுவே. எடுத்துக்காட்டு படித்தல், நடத்தல், போதல், சாதல், வருதல், வரல், போவது, வருவது, போனமை, வந்தமை ஆகியன.

2.2.2.4 வினையாலணையும் பெயர்

வினையடியாகப் பிறந்து கால இடைநிலை அல்லது எதிமறை இடைநிலையும் பாலிட விகுதிகளையும் ஏற்று வேற்றுமை ஏற்கும் இயல்போடு வரும் பெயர்களை வினையாலணையும் பெயர்கள் என்பர். இவையும் வினைத்தன்மை குன்றாத பெயர்களே. வந்தவன் என்ற வினையாலணையும் பெயர் இங்கு வேகமாக வந்தவன் என வினையடைகளை ஏற்று வருதல் காண்க. எடுத்துக்காட்டு வந்தவன், வந்தவள், வந்தவர், வந்தவர்கள், வந்தது, வந்தவை ஆகியன.

2.2.2.5 குறிப்புவினை

மேலே தெரிநிலை வினைகட்குக் கூறியவாறே குறிப்பு வினைகளிலும் முற்றுவினை, எச்சவினை என்ற வகைகள் உண்டு. நல்லன், இனியன் முதலான சொற்கள் குறிப்புவினை. நல்ல, இனிய முதலாயவை குறிப்புப் பெயரெச்சம். அன்றி, இன்றி முதலாயவை குறிப்பு வினையெச்சம். நல்லவன், இனியவன் முதலாயவை குறிப்பு வினையாலணையும் பெயர்கள்.

2.2.3 இடைச்சொல்

அடிச்சொல்லாக நில்லாமல் அடிச்சொல்லோடு சேர்ந்து நின்று இலக்கண நோக்கில் செயற்படும் சொற்களும் உணர்ச்சி வெளிப்பாட்டுக் கிளவிகளும் இடைச்சொற்கள் என்று பெயர் பெறும். அன்றியும் ஏய், அடேய் என்பன போன்ற விளிகளும் அன், இன் போன்ற சாரியைகளும் பல்வகை அசைநிலைகளும் அடைச்சொல் என்றே பயர்பெறும்.
2.2.3.1 வேற்றுமை உருபுகள்

ஒரு முற்றுத்தொடரில் நிற்கும் பெயரை எழுவாயாகவும் செயப்படுபொருளாகவும் கருவியாகவும் இடமாகவும் இவ்வாறு பல வகையில் வேற்றுமைப் படுத்தும் உருபுகளை வேற்றுமை உருபுகள் என்பர். தமிழில் உள்ள வேற்றுமைகளை எட்டு வகையாகப் பிரிப்பர். இவற்றுள் முதல் வேற்றுமைக்குத் தனியே ஒரு உருபு இல்லை. எட்டாம் வேற்றுமைக்கு உருபுகள் பல எனலாம்.

வேற்றுமைகளின் பெயர்களும் உருபுகளும் படத்தில் தரப்பட்டுள்ளன. வேற்றுமைகள் உருபாலும் பொருளாலும் எண்ணு முறையாலும் பெயர் பெற்றிருப்பதை நோக்குக.

2.2.3.2 பின்னொட்டுகள் / பின்னுருபுகள்

வேற்றுமை உருபுகளின் இலக்கணப் பணியை முன், பற்றி, இருந்து, உடைய, மீது முதலான சொற்கள் பெயர்களோடும் வேற்றுமை உருபுகளோடும் ஒட்டி நின்று இயற்றுவதுண்டு. இவை பின்னொட்டுகள் அல்லது பின்னுருபுகள் என்று பெயர் பெறும். எடுத்துக்காட்டுகள் ====> எனக்குமுன், என்னைப்பற்றி, ஊரிலிருந்து, என்னுடைய, என்மீது என்பன.

2.2.3.3 அடைகள்

நல்ல, தீய முதலாய சொற்களும் வந்த, சென்ற முதலாய சொற்களும் பெயர்கட்கு அடைகளாக வரும். வந்து, சென்று முதலாய எச்சங்களும் மெல்ல, விரைந்து முதலாய சொற்களும் வினைகட்கு அடைகளாக வரும். இவ்வாறு பெயர்களையும் வினைகளையும் கொண்டு முடியும் சொற்கள் பொதுவாக அடைகள் என்று பெயர் பெறும். பெயர் கொண்டு முடிவன பெயரடைகள் என்றும் வினைகொண்டு முடிவன வினையடைகள் என்றும் குறிக்கப்படும். பெயரடைகளை உருவாக்க ஆன, உள்ள, உடைய, உரிய முதலான கிளவிகள் பெயர்களோடு சேர்க்கப்படுவது உண்டு. பெயரடைகளை உருவாக்கப் பயன்படும் சொற்களைப் பெயரடை இடைச்சொற்கள் எனலாம். இவ்வாறே, வினையடைகளை உருவாக்க ஆக, ஆய் முதலாய கிளவிகள் பெயர்களோடு சேர்க்கப்படுவதும் உண்டு. வினையடைகளை உருவாக்கப் பயன்படும் சொற்களை வினையடை இடைச்சொற்கள் எனலாம். எடுத்துக்காட்டு====> அழகான மலர், அன்புள்ள அன்னை, கோபமாக வந்தான், கோபமாய் வந்தான்.

2.2.4 அசைமுறை வகைப்பாடு

சொற்களை ஓரசைச்சொல், ஈரசைச்சொல் என்றும், நேரசைச்சொல், நிரையசைச்சொல் என்றும் நெடிலீற்று நிரையசைச்சொல், குறிலீற்று நிரையசைச்சொல் என்றும் சந்தி இலக்கணத்தில் சுட்டிக் கூறவேண்டிய தேவை ஏற்படக்கூடும்.

ஓரசைச்சொல் (பூ, மலர்)ஈரசைச்சொல் (நாடு, பாட்டு, பழகு)நேரசைச்சொல் (பூ, பால்)நிரையசைச்சொல் (மலர், பல, பலா)நெடிலீற்று நிரையசைச்சொல் (பலா, நிலா)குறிலீற்று நிரையசைச்சொல் (பல, தெரு)

2.2.5 மேலும் சில சொல்வகை

மேலே கண்ட வகைபாடுகளோடு தனிச்சொல், கூட்டுச்சொல், வேர்ச்சொல், அடிச்சொல், செம்மொழிச்சொல், பிறமொழிச்சொல், தற்சுட்டு கிளவிகள் முதலாய வகைப்பாட்டுக் குறியீடுகளையும் இங்கே நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

2.2.5.1 தனிச்சொல்

நீ, நான் எனவும் போ, வா எனவும் நல்ல, தீய எனவும் வரும் சொற்களைத் தனிச்சொற்கள் எனலாம். ஒரு வேர்ச்சொல் தனித்தோ அல்லது ஒன்றும் பலவுமாய் விகுதிகள் அல்லது ஒட்டுகளுடனோ வருவது தனிச்சொல்.

2.2.5.2 சுட்டுச்சொல்

இயல்பாகவோ திரிந்தோ ஒன்றுக்கு மேற்பட்ட வேர்ச்சொற்கள் சேர்ந்து அமையும் சொல் ஒரு சொல் போல வரும்போது அதைக் கூட்டுச்சொல் எனலாம். 

எடுத்துக்காட்டு ====> கண்டுபிடி, பகுத்தறிவு

2.2.5.3 வேர்ச்சொல்

பகுப்பாய்வு முறையில் பிரிக்கமுடியாத நிலையில் உள்ள மூலச்சொல் வேர்ச்சொல் எனப்படும்.

எடுத்துக்காட்டு ====> கல், நெல், செல், நில்

2.2.5.4 அடிச்சொல்

விகுதிகள் சேர இடங்கொடுத்து நிற்பனவெல்லாம் அடிச்சொற்கள் எனலாம். வேர்ச்சொற்களெல்லாம் அடிச்சொற்களாக வரும். அடிச்சொற்களெல்லாம் வேர்ச்சொற்களாகாது.

நிலையம் என்பதில் அம் என்ற விகுதி நிலை என்ற அடிச்சொல்லோடு சேர்க்கப்பட்டுள்ளது. கொலை என்பதில் ஐ என்ற விகுதி கொல் என்ற அடிச்சொல்லோடு சேர்க்கப்பட்டது. கொல் என்ற வேர்ச்சொல் இங்கு அடிச்சொல்லாகவும் அமைந்துள்ளது. கொல் என்பது மேலும் பிரிக்க இடந்தராமையால் வேர்ச்சொல்லாகும்.

2.2.5.5 செம்மொழிச்சொல்

பிறமொழிகளிலிருந்து கடன்பெறாமல் ஒரு மொழி தானே உருவாக்கிய சொல்லைச் செம்மொழிச்சொல் என்று குறிப்போம். பிறமொழிகளிலிருந்து வந்து செம்மொழி நிலையை எய்திய சொற்களைச் செம்மொழிமயமான சொற்கள் என்று குறிப்போம்.

நிலம், தலை, கை, கால் முதலானவை செம்மொழிச் சொற்கள், கன்னம், தனம், தானம் முதலானவை செம்மொழிமயமான சொற்கள் எனலாம்.

2.2.5.6 பிறமொழிச்சொல்

பிறமொழிகளிலிருந்து தேவையை முன்னிட்டுக் கடன் கொண்ட சொற்கள் பிறமொழிச் சொற்கள் என்ற வகையில் அடங்கும். டாக்டர், ரயில், லாரி முதலானவை பிறமொழிச் சொற்கட்குச் சில காட்டுகள்.

2.2.6 பகுபத உறுப்புகள்

சொற்களைப் பொதுவாகப் பகுபதம், பகாப்பதம் என்று பிரிப்பர். பிரிக்க இடம் தராத பதம் பகாப்பதம் என்றும், பிரிக்க இடம் தரும் பதம் பகுபதம் என்றும் பெயர் பெறும். பகுபதங்களில் பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் முதலான உறுப்புகள் அமைந்திருக்கும்.

2.2.6.1 பகுதி

ஒரு சொல்லிலுள்ள பகாப்பதமே பகுதி என்று பெயர் பெறும். நடந்தான் என்பதில் நட என்பது பகுதி.

2.2.6.2 விகுதி

பகுதியோடு சேர்ந்து வலப்பக்கம் நிற்கவல்ல கிளவிகளை விகுதி என்பர்.

சொல் (பகுதி + விகுதி)

நல்ல (நல் + அ)ஓடி (ஓடு + இ)ஊரன் (ஊர் + அன்)

2.2.6.3 இடைநிலை

காலங் காட்டவும் எதிர்மறை உணர்த்தவும் இடையில் நிற்கும் கிளவிகள் இடைநிலைகளாம். எடுத்துக்காட்டு கீழே

நடக்கிறான் : கிறுசெய்தாள் : த்போகாது : ஆ

2.2.6.4 சாரியை

தனக்கெனத் தனிப்பொருளின்றிச் சொற்களை உருவாக்கத்தக்க வகையில் சார்ந்து இயைந்து நிற்பது சாரியையாம். எடுத்துக்காட்டு கீழே

நடந்தனன் : அன்ஊரினன் : இன்

2.2.6.5 சந்தி

பகுதியும் கால இடைநிலையும் சந்திக்கும் வகையில் அமைந்தது சந்தி. எடுத்துக்காட்டுகள் கீழே

கொடுத்தான் (கொடு + த் + த் + ஆன்)தடுத்தான் (தடு + த் + த் + ஆன்) 

இங்கே பகுதியை அடுத்துள்ள தகர ஒற்றைச் சந்தி என்பர்.

2.2.6.6 விகாரம்

சந்தி எழுத்துகள் சில சொற்களில் விகாரப்படுவதும் உண்டு. இதை விகாரம் என்பர்.

நட - த் - த் ஆன் என்பது நடந்தான் என்று ஆகும் போது த் என்பது ந் ஆகி விகாரமானது. த் என்ற சந்தி ந் ஆகி விகாரப்பட்டது.

2.2.7 தற்சுட்டு கிளவிகள்

ஐ, ஔ என்பன ஐ, ஔ என்ற எழுத்துகள் என்ற பொருளிலும், புளி என்பது புளி என்ற சொல் என்ற பொருளிலும் வரும்போது அவை ஒவ்வொன்றும் தன்னையே சுட்டி நிற்பதால் தற்சுட்டு கிளவிகள் எனப்பெயர் பெறும்.