பாவேந்தர் பாரதிதாசன் விருதுப ட்டியல்

திராவிட, பகுத்தறிவு கொள்கைகளை தனது பாடல்களில் வைத்து புரட்சிகரமான பாடல்களாக தமிழில் இயற்றி, தமிழ் மொழிக்கு மிகச்சிறந்த சேவையாற்றிய மாபெரும் கவிஞர் புரட்சிக்கவி, பாவேந்தர் என அழைக்கப்படும் பாரதிதாசன் பெயரால் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது
தமிழக அரசால் 1978-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தமிழ்க் கவிஞர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படுகிறது.

இதுவரை பாவேந்தர் பாரதிதாசன் விருதை பெற்றோர்:
*    1978 - கவிஞர் சுரதா
*    1979 - எஸ்.டி. சுந்தரம், கவிஞர் வாணிதாசன்
*    1980 - கவிஞர் முத்துலிங்கம்
*    1981 - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
*    1982 - கவிஞர் புத்தனேரி சுப்ரமணியம்
*    1983 - கவிஞர் வகாப்
*    1984 - கவிஞர். நா. காமராசன்
*    1985 - கவிஞர் ஐ. உலகநாதன்
*    1986 - கவிஞர். மு. மேத்தா
*    1987- கவிஞர் முடியரசன்
*    1988- கவிஞர் பொன்னிவளவன்
*    1989 - கவிஞர் அப்துல் ரகுமான்
*   1990 - பாவேந்தர் நூற்றாண்டுத் தொடக்க விழாவில் 21 பேர் விருது பெற்றனர்.
*    1991 - பாவேந்தர் நூற்றாண்டு நிறைவு விழாவில் 23 பேர் விருது பெற்றனர்.
*    1992 - கவிஞர் முத்துராமலிங்கம்
*    1993 - புலவர். பெ. அ. இளஞ்செழியன்
*    1994 - கவிஞர். கரு. நாகராசன்
*    1995 -கவிஞர் மறைமலையான்
*    1996 - கவிஞர். இரா. வைரமுத்து
*    1997 - முனைவர். சரளா இராசகோபாலன்
*    1998 - முரசு நெடுமாறன் (மலேசியா)
*    1999 - சிலம்பொலி சு. செல்லப்பன்
*    2000 - பாவலர் மணிவேலன்
*    2001 - கவிஞர் மணிமொழி
*    2002 - முனைவர் ச.சு. இராமர் இளங்கோ
*    2003 - பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி
*    2004 - பேராசிரியர் லெ.ப. கரு. இராமநாதன்
*    2005 - விருது வழங்கப்படவில்லை
*    2006 - முனைவர் கா. செல்லப்பன்
*    2007 - திருச்சி எம்.எஸ். வெங்கடாசலம்
*    2008 - தமிழச்சி தங்கபாண்டியன்
*    2009 -கவிஞர் தமிழ்தாசன்
*    2010 - முனைவர் இரா. இளவரசு
*    2011 - கவிஞர். ஏர்வாடி க. இராதாகிருஷ்ணன்
*    2012 - முன்னவர் சே. நா. கந்தசாமி
*    2013 - முனைவர் இராதா செல்லப்பன்