புறநானூறு

சொற்பொருள்;
♣ துகிர் – பவளம்
♣ மன்னிய – நிலைபெற்ற
♣ செய – தொலைவு
♣ தொடை – மாலை
♣ கலம் – அணி

இலக்கணக்குறிப்பு:
♣ பொன்னும் துகிரும் முத்தும் பவளமும் மணியும் – எண்ணும்மை
♣ மாமாலை – உரிச்சொற்றொடர்
♣ அருவிலை, நன்கலம் – பண்புத்தொகை

பிரித்தறிதல்:
♣ அருவிலை = அருமை + விலை
♣ நன்கலம் = நன்மை + கலம்

ஆசிரியர் குறிப்பு:
♣ இப்பாடலாசிரியர் கண்ணகனார் கோப்பெருஞ்சோழனின் அவைக்களப் புலவர்.
♣ கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொது, பிசிராந்தையாரின் வருகைக்காகக் காத்திருந்தான்.
♣ அப்போது அவருடன் இருந்தவர் கண்ணகனார்.
♣ அவன் உயிர் துறந்தபொழுது மிகவும் வருந்தினார் கண்ணகனார்.

நூல் குறிப்பு:
♣ எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு.
♣ இது புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது.