பெரியபுராணம்

சொற்பொருள்:
  1. காய்ந்தார் – நீக்கினார்
  2. மனை – வீடு
  3. ஆ – பசு
  4. மேதி – எருமை
  5. நிறைகோல் – துலாக்கோல்(தராசு)
  6. தடம் – தடாகம்
  7. மந்தமாருதசீதம் – குளிர்ந்த காற்றுடன் கூடிய நீர்
  8. சந்தம் – அழகு
  9. ஈறு – எல்லை
  10. கல்மிதப்பு – கல்லாகிய தெப்பம்
  11. புவனம் – உலகம்
  12. சூலை – கொடிய வயிற்றுநோய்
  13. தெருளும் – தெளிவில்லாத
  14. கரம் – கை
  15. கமலம் – தாமரை
  16. மிசை – மேல்
  17. திருநீற்றுக்காப்பு – திருநீறு
  18. நேர்ந்தார் – இசைந்தார்
  19. பொற்குருத்து – இளமையான வாழைக்குருத்து
  20. ஒல்லை – விரைவு
  21. மல்லல் – வளமான
  22. ஆம் – அழகிய
  23. வால் – கூரிய
  24. ரா – பாம்பு
  25. அல்லல் – துன்பம்
  26. அங்கை – உள்ளங்கை
  27. உதிரம் – குருதி
  28. மேனி – உடல்
  29. மறைநூல் – நான்மறை
  30. சேய் – குழந்தை
  31. பூதி – திருநீறு
  32. மெய் – உண்மை
  33. பணிவிடம் – பாம்பின் நஞ்சு
  34. சவம் – பிணம்


இலக்கணக்குறிப்பு:
  1. செலவொழியா வலி – ஈறுகெட்ட எதிர்மறைப்  பெயரெச்சம்
  2. வழிக்கரை – ஆறாம் வேற்றுமைத்தொகை
  3. உறுவேனில் – உரிச்சொற்றொடர்
  4. நீர்த்தடம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
  5. பந்தர் – கடைப்போலி
  6. அணைந்த வாகீசர் – பெயரெச்சம்
  7. பொங்குகடல் – வினைத்தொகை
  8. பெருமையறிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை
  9. அறிந்து, அடைந்து – வினையெச்சம் கரகமலம் – உருவகம்
  10. பொழிந்திழிய – வினையெச்சம்
  11. தேசம் – இடவாகு பெயர்
  12. வந்தவர் – வினையாலணையும் பெயர்
  13. நற்கரிகள், இன்னமுதம் – பண்புத்தொகை
  14. தாய்தந்தை – உம்மைத்தொகை
  15. மல்லலம் குருத்து – உரிச்சொற்றொடர்
  16. தீண்டிற்று – ஒன்றன்பால் வினைமுற்று
  17. துளங்குதல் – தொழிற்பெயர்
  18. பூதி சாத்த – இரண்டாம் வேற்றுமைத்தொகை
  19. அங்கணர் – அன்மொழித்தொகை
  20. நோக்கி – வினையெச்சம்
  21. எழுந்து, சென்று – வினையெச்சம்
  22. பணிவிடம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
  23. கேளா – செய்யா என்னும் வாய்ப்பாடு வினையெச்சம்


பிரித்தறிதல்:
  1. செலவொழியா = செலவு + ஒழியா
  2. வழிக்கரை = வழி + கரை
  3. வந்தணைந்த = வந்து + அணைந்த
  4. எம்மருங்கும் = எ + மருங்கும்
  5. எங்குரைவீர் = எங்கு + உறைவீர்
  6. கண்ணருவி = கண் + அருவி
  7. உடம்பெல்லாம் = உடம்பு + எல்லாம்
  8. திருவமுது = திரு + அமுது
  9. மனந்தழைப்ப = மனம் + தழைப்ப
  10. நற்கரிகள் = நன்மை + கறிகள்
  11. இன்னமுது = இனிமை + அமுது
  12. வாளரா = வாள் + அரா
  13. அங்கை = அம் + கை
  14. நான்மறை = நான்கு + மறை
  15. பாவிசை = பா + இசை


ஆசிரியர் குறிப்பு:
  1. பெரியபுராணத்தை அருளியவர் சேக்கிழார்.
  2. இவர் தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிறந்தவர்.
  3. இவரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்.
  4. இவர் அநபாயச்சோழனிடம் தலைமை அமைச்சராய்த் திகழ்ந்தவர்.
  5. இவர் உத்தமசோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்.
  6. இவரைத் தெய்வச் சேக்கிழார் என்றும் தொண்டர்சீர் பரவுவார் என்றும் போற்றுவர்.
  7. இவரின் காலம் கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டு.


நூல் குறிப்பு:
  1. தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக எழுபத்திருவர் சிவனடியார் ஆவர்.
  2. அவ்வடியார்களின் வரலாற்றைக் கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் “பெரியபுராணம்” என்னும் பெயர் பெற்றது.
  3. இந்நூலுக்கு சேக்கிழார் இட்ட பெயர் “திருத்தொண்டர் புராணம்” என்பதாகும்.
  4. தில்லை நடராசப்பெருமான், “உலகெலாம்” என்று அடியெடுத்த்துக் கொடுக்கப் பாடப்பெற்றதெனவும் கூறுவர்.
  5. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார், “பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” எனச் சேக்கிழார் பெருமானைப் புகழ்கிறார்.
  6. உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான், “பெரியபுராணம்” என்பார் திரு.வி.க.