சொற்பொருள்:
- காய்ந்தார் – நீக்கினார்
- மனை – வீடு
- ஆ – பசு
- மேதி – எருமை
- நிறைகோல் – துலாக்கோல்(தராசு)
- தடம் – தடாகம்
- மந்தமாருதசீதம் – குளிர்ந்த காற்றுடன் கூடிய நீர்
- சந்தம் – அழகு
- ஈறு – எல்லை
- கல்மிதப்பு – கல்லாகிய தெப்பம்
- புவனம் – உலகம்
- சூலை – கொடிய வயிற்றுநோய்
- தெருளும் – தெளிவில்லாத
- கரம் – கை
- கமலம் – தாமரை
- மிசை – மேல்
- திருநீற்றுக்காப்பு – திருநீறு
- நேர்ந்தார் – இசைந்தார்
- பொற்குருத்து – இளமையான வாழைக்குருத்து
- ஒல்லை – விரைவு
- மல்லல் – வளமான
- ஆம் – அழகிய
- வால் – கூரிய அ
- ரா – பாம்பு
- அல்லல் – துன்பம்
- அங்கை – உள்ளங்கை
- உதிரம் – குருதி
- மேனி – உடல்
- மறைநூல் – நான்மறை
- சேய் – குழந்தை
- பூதி – திருநீறு
- மெய் – உண்மை
- பணிவிடம் – பாம்பின் நஞ்சு
- சவம் – பிணம்
இலக்கணக்குறிப்பு:
- செலவொழியா வலி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- வழிக்கரை – ஆறாம் வேற்றுமைத்தொகை
- உறுவேனில் – உரிச்சொற்றொடர்
- நீர்த்தடம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
- பந்தர் – கடைப்போலி
- அணைந்த வாகீசர் – பெயரெச்சம்
- பொங்குகடல் – வினைத்தொகை
- பெருமையறிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை
- அறிந்து, அடைந்து – வினையெச்சம் கரகமலம் – உருவகம்
- பொழிந்திழிய – வினையெச்சம்
- தேசம் – இடவாகு பெயர்
- வந்தவர் – வினையாலணையும் பெயர்
- நற்கரிகள், இன்னமுதம் – பண்புத்தொகை
- தாய்தந்தை – உம்மைத்தொகை
- மல்லலம் குருத்து – உரிச்சொற்றொடர்
- தீண்டிற்று – ஒன்றன்பால் வினைமுற்று
- துளங்குதல் – தொழிற்பெயர்
- பூதி சாத்த – இரண்டாம் வேற்றுமைத்தொகை
- அங்கணர் – அன்மொழித்தொகை
- நோக்கி – வினையெச்சம்
- எழுந்து, சென்று – வினையெச்சம்
- பணிவிடம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
- கேளா – செய்யா என்னும் வாய்ப்பாடு வினையெச்சம்
பிரித்தறிதல்:
- செலவொழியா = செலவு + ஒழியா
- வழிக்கரை = வழி + கரை
- வந்தணைந்த = வந்து + அணைந்த
- எம்மருங்கும் = எ + மருங்கும்
- எங்குரைவீர் = எங்கு + உறைவீர்
- கண்ணருவி = கண் + அருவி
- உடம்பெல்லாம் = உடம்பு + எல்லாம்
- திருவமுது = திரு + அமுது
- மனந்தழைப்ப = மனம் + தழைப்ப
- நற்கரிகள் = நன்மை + கறிகள்
- இன்னமுது = இனிமை + அமுது
- வாளரா = வாள் + அரா
- அங்கை = அம் + கை
- நான்மறை = நான்கு + மறை
- பாவிசை = பா + இசை
ஆசிரியர் குறிப்பு:
- பெரியபுராணத்தை அருளியவர் சேக்கிழார்.
- இவர் தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிறந்தவர்.
- இவரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்.
- இவர் அநபாயச்சோழனிடம் தலைமை அமைச்சராய்த் திகழ்ந்தவர்.
- இவர் உத்தமசோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்.
- இவரைத் தெய்வச் சேக்கிழார் என்றும் தொண்டர்சீர் பரவுவார் என்றும் போற்றுவர்.
- இவரின் காலம் கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு:
- தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக எழுபத்திருவர் சிவனடியார் ஆவர்.
- அவ்வடியார்களின் வரலாற்றைக் கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் “பெரியபுராணம்” என்னும் பெயர் பெற்றது.
- இந்நூலுக்கு சேக்கிழார் இட்ட பெயர் “திருத்தொண்டர் புராணம்” என்பதாகும்.
- தில்லை நடராசப்பெருமான், “உலகெலாம்” என்று அடியெடுத்த்துக் கொடுக்கப் பாடப்பெற்றதெனவும் கூறுவர்.
- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார், “பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” எனச் சேக்கிழார் பெருமானைப் புகழ்கிறார்.
- உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான், “பெரியபுராணம்” என்பார் திரு.வி.க.