GENERAL TAMIL 7
- கம்பராமாயணத்தை இயற்றியவர் (கம்பர்)
- தாம் இயற்றிய இராமகாதைக்குக் கம்பர் இட்ட பெயர் (இராமவதாரம்)
- வடமொழியில் இராமாயணம் இயற்றியவர் (வான்மீகி)
- ஆதிகாவியம் என்று அழைக்கப்படும் நூல் (இராமாயணம்)
- ’ஆதிகவி’ என்று அழைக்கப்படக் கூடியவர் (வான்மீகி)
- கம்பநாடகம், கம்பசித்திரம் என அழைக்கப்படும் நூல் (கம்ப இராமாயணம்)
- கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு (96)
- கம்பராமாயணத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை (ஆறு)
- உத்தரகாண்டத்தைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)
- சுந்தரகாண்டம் இராமாயணத்தில் --------- ஆவது காண்டம் (ஐந்தாவது)
- இராமாயணத்தில் முடிமணியாக விளங்கும் காண்டம் (சுந்தரகாண்டம்)
- சிறியதிருவடி என்று அழைக்கப்படக் கூடியவர் (அனுமன்)
- சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் (அனுமன்)
- சீதையை அனுமன் கண்டது ---------- என்னும் இடத்தில் (அசோகவனம்)
- ’தனயை’ என்னும் சொல்லின் பொருள் (மகள்)
- இராமன் கொடுத்ததாக அனுமன் சீதையிடம் காட்டியது (கணையாழி)
- சீதாப்பிராட்டி தன்னை மீட்டுச் செல்ல வேண்டி விதித்த காலம் (ஒரு திங்கள்)
- வீரமாமுனிவரின் தாய்நாடு (இத்தாலி)
- தேம்பாவணியை இயற்றியவர் (வீரமாமுனிவர்)
- தேம்பாவணியின் காண்டங்களின் எண்ணிக்கை (மூன்று)
- இயேசுபிரானின் வளர்ப்புத் தந்தை (சூசை மாமுனிவர்)
- தேம்பாவணியின் பாட்டுடைத் தலவர் (சூசை மாமுனிவர்)
- கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் (தேம்பாவணி)
- கொன்ஸ்டான் என்னும் சொல்லுக்குப் பொருள் (அஞ்சாதவன்)
- வீரமாமுனிவர் இயற்கை எய்திய இடம் (அம்பலக்காடு)
- திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்தது ------- மொழியில் (இத்தாலி)
- வீரமாமுனிவர் தொகுத்த அகராதி (சதுரகராதி)
- பாண்டியன் பரிசு நூலின் ஆசிரியர் (பாரதிதாசன்)
- பாரதிதாசனின் இயற்பெயர் (கனக சுப்புரத்தினம்)
- பாரதிதாசன் ஆற்றிய பணி (ஆசிரியர் பணி)
- தமிழ்மொழியும், தமிழரும், தமிழ்நாடும் சீர்பெற்றுச் சிறக்க பாடல்திறம் முழுவதையும் பயன்படுத்தியவர் (பாரதிதாசன்)
- புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படக் கூடியவர் (பாரதிதாசன்)
- ‘தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை’ என்று பாடியவர் (இரசூல் கம்சதோவ்)
- பாரதிதாசன் கவிதைகளை எந்தக்கவிஞரின் கவிததைகளோடு ஒப்புநோக்கப் படுகிறது (இரசூல் கம்சதோவ்)
- பாரதிதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது? (பிசிராந்தையார்)
- “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு (புதுவை அரசு)
- பாரதிதாசன் வெளியிட்ட இதழ் (குயில்)
- தமிழக அரசு பாரதிதாசனின் நினைவாக நிறுவியது (பல்கலைக் கழகம்)
- பிரபந்தம் என்னும் சொல்லின் பொருள் (நன்கு கட்டப்பட்டது)
- சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைக் கூறும் நூல் (பாட்டியல் நூல்கள்)
- பிரபந்தம் தொண்ணூற்றாறு எனப் பட்டியலிடும் நூல் (சதுரகராதி)
- உலா என்பதன் பொருள் (பவனி வரல்)
- உலா பாடப்படும் பாவகை ------------------------ (கலிவெண்பா)
- உலாப்புறம் என அழைக்கப்படும் நூல் (உலா)
- பேதைப் பருவத்தின் வயது (5-7)
- பெதும்பைப் பருவத்தின் வயது (8-11)
- மங்கைப் பருவத்தின் வயது (12-13)
- மடந்தைப் பருவத்தின் வயது (14-19)
- அரிவைப் பருவத்தின் வயது (20-25)
- தெரிவைப் பருவத்தின் வயது (26-32)
- பேரிளம்பெண் பருவத்தின் வயது (33-40)
- இராசராச சோழனுலாவைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)
- கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர் (ஒட்டக்கூத்தர்)
- மூவருலாவைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)
- ’ஒட்டம்’ என்னும் சொல்லின் பொருள் (பந்தயம்)
- ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் (கூத்தர்)
- அந்தம் என்னும் சொல்லின் பொருள் (இற
- ’ஒன்றேயென்னின்’ என்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ள காண்டம் (யுத்தகாண்டம்)
- வடமொழியில் இராமாயணத்தை இயற்றியவர் ( வான்மீகி )
- கவிப் பேரரசர் (கம்பர்)
- கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் (இராமவதாரம்)
- கம்பர் பிறந்த ஊர் (திருவழுந்தூர்)
- கம்பர் வாழ்ந்த காலம் (கி.பி.12)
- கம்பரை ஆதரித்த வள்ளல் (சடையப்ப வள்ளல்)
- ‘கவிச்சக்கரவர்த்தி’ எஅனப் போற்றப்படுபவர் (கம்பர்)
- மொழிவாழ்த்துப் பாடல் இடம் பெற்றுள்ள நூல் (தமிழரசி குறவஞ்சி)
- தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் (வரதநஞ்சையப் பிள்ளை)
- தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் (சுவாமிமலை முருகன்)
- தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவி (தமிழன்னை)
- கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் ‘ஆசிரியர்’ என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர் (வரதநஞ்சையப் பிள்ளை)
- கற்றோரால் ‘புலவரேறு’ எனச் சிறப்பிக்கப் பட்டவர் (வரதநஞ்சையப் பிள்ளை)
- வரதநஞ்சையப் பிள்ளை கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் நமசிவாய முதலியார் தலைமையில் ---------------- பரிசளிக்கப் பெற்றார் (தங்கத்தோடா)
- வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை -------------------- தலைமையில் அரங்கேற்றினார். (நமசிவாய முதலியார்)
- யார் கேட்டுக் கொண்டதற்கிணங்க வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை இயற்றினார். (உமா மகேசுவரனார்)
- நாட்டு வாழ்த்துப் பாடல் இடம்பெற்றுள்ள நூல் (நாமக்கல் கவிஞர் பாடல்கள்)
- நாட்டுவாழ்த்துப் பாடல் நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலில் --------------- பகுதியில் அமைந்துள்ளது. (தேசிய மலர்)
- நாமக்கல் கவிஞர் பிறந்த ஊர் (மோகனூர்)
- நாமக்கல் கவிஞர் எக்கலையில் வல்லவர் (ஓவியக்கலை)
- ‘கத்தியின்றி இரத்தமின்ம்றி’ என்னும் பாடலை இயற்றியவர் (நாமக்கல் கவிஞர்)
- நாமக்கல் கவிஞருக்கு நடுவணரசு ----------- விருதளித்துச் சிறப்பித்தது (பத்மபூஷன்)
- நாமக்கல் கவிஞருக்கு மாநில அரசு செய்த சிறப்பு (அரசவைக் கவிஞர், சட்ட மேலவை உறுப்பினர்)
- முதலில் அரசவை கவிஞராக இருந்தவர் (நாமக்கல் கவிஞர்)
- பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களுக்கு வழங்கும் வேறு பெயர் (மேற்கணக்கு நூல்கள்)
- எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் பற்றிய நூல் (பதிற்றுப் பத்து, புறநானூறு)
- அகப்புறப் பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகை நூல் (பரிபாடல்)