GENERAL TAMIL 8
- சங்க நூல்கள் பழந்தமிழ் இலக்கணமாகிய --------------- இலக்கியங்களாகத் திகழ்கின்றன. (தொல்காப்பியம்)
- சங்கப் புலவர்கள் சிறப்பாகக் கையாண்டுள்ள உத்தி ----------- (உள்ளுறை உவமம், இறைச்சி)
- உள்ளுறை உவமம், இறைச்சி ஆகியவற்றை ------------- எனவும் அழைக்கலாம். (குறிப்புப் பொருள் உத்தி)
- புறநானூற்றிற்கு வழங்கும் வேறு பெயர் (புறம், புறப்பாட்டு)
- புறம், புறப்பாட்டு என வழங்கப் பெறுவது (புறநானூறு)
- புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்)
- புறநானூற்றில் அமைந்துள்ள திணைகள் (11)
- புறநானூற்றில் அமைந்துள்ள துறைகள் (65)
- தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல் (புறநானூறு)
- புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை வெளிநாட்டறிஞர் ------------ அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். (ஜி.யு.போப்)
- அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை (13 – 31)
- அகநானூற்றைத் தொகுத்தவர் (உருத்திரசன்மர்)
- அகநானூற்றைத் தொகுப்பித்தவன் (பாண்டியன் உக்கிரப்பெருவழுதி)
- அகநானூற்றிற்கு வழங்கும் வேறுபெயர் (நெடுந்தொகை)
- ‘அகம்’ என்ற பெயரில் அமைந்த பழந்தமிழ் இலக்கிய நூல் (அகநானூறு)
- அகநானூற்றில் அமைந்துள்ள பிரிவுகளின் எண்ணிக்கை (மூன்று)
- அகநானூறு களிற்றியானைநிரையில் உள்ள பாடல்கள் (120)
- அகநானூறு மணிமிடைபவளத்தில் உள்ள பாடல்கள் (180)
- அகநானூறு நித்திக்கோவையில் உள்ள பாடல்கள் (100)
- அகநானூற்றில் 1,3 என ஒற்றைப்படை எண்களாக வருவன ---------- திணைப் பாடல்கள் (பாலை)
- அகநானூற்றில் 2,8 என வரும் பாடல்கள் ----------- திணைப் பாடல்கள் (குறிஞ்சி)
- அகநானூற்றில் 4,14 என வரும் பாடல்கள் ----------- திணைப் பாடல்கள் (முல்லை)
- அகநானூற்றில் 6.16 என வரும் பாடல்கள் ----------- திணைப்பாடல்கள் (மருதம்)
- அகநானூற்றில் 10, 20 என வரும் பாடல்கள் ------------ திணைப்பாடல்கள் (நெய்தல்)
- எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்ற நூல் (நற்றிணை)
- நற்றிணைப் பாக்களின் அடிவரையறை (9 – 12)
- நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்)
- நற்றிணையைத் தொகுப்பித்தவன் (பன்னாடு தந்த மாறன்வழுதி)
- குறுந்தொகைப் பாக்களின் அடிவரையறை (4-8)
- குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்)
- குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை (402)
- கபிலர் பிறந்த ஊர் (திருவாதவூர்)
- கபிலர் --------- மன்னனின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார். (பாரி)
- கபிலரின் பாட்டுத் திறனுக்கு ----------என்னும் தொடரே சான்றாகும் (வாய்மொழிக் கபிலர்)
- கபிலர் ------------- திணைப் பாடல்கள் பாடுவதி வல்லவர் (குறிஞ்சி)
- கபிலரின் உயிர்த்தோழராக விளங்கிய கடையெழு வள்ளல்களுள் ஒருவர் (பாரி)
- கபிலரை வாய்மொழிக் கபிலர் எனப் பாராட்டியவர் (நக்கீரர்)
- கபிலரை ‘நல்லிசைக் கபிலர்’ எனப் பாராட்டியவர் (பெருங்குன்றூர்க் கிழார்)
- கபிலரை ’வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்’ எனப் பாராட்டியவர் (பொருந்தில் இளங்கீரனார்)
- கபிலரை ‘புலனழுக்கற்ற அந்தணாளன்’, ‘பொய்யா நாவிற் கபிலன்’ எனப் பாராட்டியவர் (மாறோக்கத்து நப்பசலையார்)
- ஐங்குறுநூற்றுப் பாக்களின் அடிவரையறை (3-5)
- ஐங்குறுநூற்றில் ஒவ்வொரு திணையிலும் உள்ள பாடல்களின் எண்ணிக்கை (100)
- ஐங்குறுநூறு பாடல்களின் எண்ணிக்கை (500)
- ஐங்குறுநூறு குறிஞ்சித் திணையைப் பாடியவர் (கபிலர்)
- ஐங்குறுநூறு முல்லைத் திணையைப் பாடியவர் (பேயனார்)
- ஐங்குறுநூறு மருதத் திணையைப் பாடியவர் (ஓரம்போகியார்)
- ஐங்குறுநூறு நெய்தல் திணையைப் பாடியவர் (அம்மூவனார்)
- ஐங்குறுநூறு பாலைத் திணையைப் பாடியவர் (ஓதலாந்தையார்)
- ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்)
- ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் (கூடலூர் கிழார்)
- ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவன் (யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை)
- திருக்குறள் என்பதன் இலக்கணக் குறிப்பு (அடையடுத்த ஆகுபெயர்)
- குறட்பா என்பது --------------- வெண்பா (இரண்டு)
- திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை (38)
- திருக்குறள் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை (70)
- திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் (25)
- திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் (9)
- திருக்குறள் அறத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள் (4)
- திருக்குறள் பொருட்பாலில் அமைந்துள்ள இயல்கள் (3)
- திருக்குறள் காமத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள் (2)
- ’பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்’ என்னும் பழமொழியில் இரண்டு என்பது எதைக் குறிக்கிறது? (திருக்குறள்)
- திருக்குறளின் பெருமையை உணர்த்துவது (திருவள்ளுவமாலை)
- ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ எனப் பாடியவர் (பாரதியார்)
- வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ எனப் பாடியவர் (பாரதிதாசன்)
- திருக்குறளுக்கு முன்னர் உரையெழுதியோர் எண்ணிக்கை (பத்து)
- திருக்குறளுக்கு ----------------- என்பார் எழுதிய உரையே சிறந்ததாக புகழப்படுகிறது. (பரிமேலழகர்)
- முப்பால், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப்பயன், பொருளுரை, முதுமொழி என வழங்கப்படும் நூலின் பெயர் (திருக்குறள்)
- கொண்டாடப்பெறும் திருவள்ளுவராண்டின்படி அவர் வாழ்ந்த காலம் (கி.மு.31)
- ஐம்பெருங்காப்பியங்களுள் தலையாயது (சிலப்பதிகாரம்)
- முத்தமிழ்க்காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம் எனப் பாராட்டப்படும் நூல் (சிலப்பதிகாரம்)
- சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை (மூன்று)
- சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு (காதை)
- சிலப்பதிகாரத்திலுள்ள காதைகளின் எண்ணிக்கை (30)
- சிலப்பதிகாரத்தை இயற்றியவர் (இளங்கோவடிகள்)
- இளங்கோவடிகளின் தந்தை ------------------- ஆவார் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்)
- இளங்கோவடிகளின் தாயார் பெயர் (நற்சோனை)
- இளங்கோவடிகளின் தமையன் பெயர் (சேரன்செங்குட்டுவன்)
- சிலப்பதிகாரத்தின் காலம் (கி.பி.2 ம் நூற்றாண்டு)
- சிலப்பதிகாரம் அரும்பதங்களுக்கு மட்டும் உரையெழுதியவர் (அரும்பத உரைகாரர்)
- சிலப்பதிகாரத்திற்கு முற்காலத்தில் விளக்கமான உரை எழுதியவர் (அடியார்க்குநல்லார்)
- சிலப்பதிகாரத்திற்கு இக்காலத்தில் வழங்கும் மிகச்சிறந்த உரை (ந.மு.வேங்கடசாமி நாட்டார்)
- சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இவ்வாறு அழைப்பர் (இரட்டைக் காப்பியங்கள்)
- மணிமேகலையை இயற்றியவர் (சீத்தலைச் சாத்தனார்)
- யார் வேண்டிக்கொள்ள இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்? (சீத்தலைச் சாத்தனார்)
- ’நெஞ்சையள்ளும் சிலம்பு’ எனப் பாராட்டியவர் (பாரதியார்)
- ”தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம்” எனப்பாராட்டியவர் (கவிமணி)
- வரி என்பது ------------------ வகையது. (இசைப்பாடல்)
- கண்ணகியின் தந்தை பெயர் (மாசாத்துவான்)
- கோவலனின் தந்தை பெயர் (மாநாய்கன்)
- மாதவி என்னும் ஆடல்மகள் -------------- என்ற பட்டம் பெற்றவள். (தலைக்கோலரிவை)
- கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண்ணின் பெயர் (மணிமேகலை)
- கம்பராமாயணத்தை இயற்றியவர் (கம்பர்)
- தாம் இயற்றிய இராமகாதைக்குக் கம்பர் இட்ட பெயர் (இராமவதாரம்)
- வடமொழியில் இராமாயணம் இயற்றியவர் (வான்மீகி)
- ஆதிகாவியம் என்று அழைக்கப்படும் நூல் (இராமாயணம்)
- ’ஆதிகவி’ என்று அழைக்கப்படக் கூடியவர் (வான்மீகி)
- கம்பநாடகம், கம்பசித்திரம் என அழைக்கப்படும் நூல் (கம்ப இராமாயணம்)
- கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு (96)
- கம்பராமாயணத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை (ஆறு)
- உத்தரகாண்டத்தைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)
- சுந்தரகாண்டம் இராமாயணத்தில் --------- ஆவது காண்டம் (ஐந்தாவது)
- இராமாயணத்தில் முடிமணியாக விளங்கும் காண்டம் (சுந்தரகாண்டம்)
- சிறியதிருவடி என்று அழைக்கப்படக் கூடியவர் (அனுமன்)
- சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் (அனுமன்)
- சீதையை அனுமன் கண்டது ---------- என்னும் இடத்தில் (அசோகவனம்)
- ’தனயை’ என்னும் சொல்லின் பொருள் (மகள்)
- இராமன் கொடுத்ததாக அனுமன் சீதையிடம் காட்டியது (கணையாழி)
- சீதாப்பிராட்டி தன்னை மீட்டுச் செல்ல வேண்டி விதித்த காலம் (ஒரு திங்கள்)